பொங்கலுக்கான சிறப்பு பட்டிமன்றம்

பொங்கலுக்கான சிறப்பு பட்டிமன்றம்

1 mins read

இன்­றைய இளை­ய­ருக்கு மேலும் அவ­சி­யம் அறி­வின் பெருக்­கமா? உற­வின் நெருக்­கமா? என்ற தலைப்­பில் இம்­மா­தம் 23ஆம் தேதி நடந்த பட்­டி­மன்­றம் தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கத்­தின் ஃபேஸ்புக் தளத்­தில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பா­னது. வழக்­கம்­போல் மாண­வர்­களும் இந்­நி­கழ்ச்­சி­யில் பங்­கேற்று பொங்­க­லுக்கு சிறப்புச் சேர்த்­த­னர். பட்­டி­மன்ற நாய­க­ராக தமி­ழ­கத்­தைச் சேர்ந்த மூத்த வழக்­க­றி­ஞர், திரு த. இரா­ம­லிங்­கம் செயல்­பட்­டார்.

'அறி­வின் பெருக்­கமே' என்ற தலைப்­பில் திரு­மதி வெண்­ணிலா அசோ­கன், செல்வி இனியா செந்­தில்­கு­மார், செல்­வன் ரோகித்­கு­மார் சொக்­க­லிங்­கம் ஆகி­யோ­ரும் வாதிட 'உற­வின் நெருக்­கமே' என்ற தலைப்­பில் திரு­மதி ராஜ­லட்­சுமி ரவிக்­கு­மார், செல்வி தீபிகா பால­மு­ரு­கன், செல்வி ஷர­ணி­கௌ­ரி­தரன் ஆகி­யோ­ரும் வாதிட்­ட­னர்.

அனை­வ­ரின் அணு­கு­மு­றை­யும் தனித்­தன்­மை­யு­டன் திகழ்ந்­தது பட்டி­மன்­றத்­தின் வெற்றி என்று பலர் கருத்­து­ரைத்­த­னர்.

தீர்ப்­புரை வழங்­கிய திரு இரா­ம­லிங்­கம், அறி­வுக்­கும் உற­வுக்­கு­மான உறவைப் பற்றி சிறப்­பாக விவரித்துத் தமது கருத்துகளை எடுத்­துச் சொன்­னார்.