மேரிமவுண்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, 23ஆம் தேதி நடந்த, 'பொங்கலோ பொங்கல்' நிகழ்வில் நேரடியாகவும் இணையம் மூலமும் சுமார் 100 வட்டாரவாசிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி, முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணனின் சிறப்புரை, கோமிக்ஸ் தி காஸல் நிறுவனத்தின் நகைச்சுவை அங்கம் என அனைவரும் பங்கேற்கும் வகையில் பல அங்கங்கள் இடம்பெற்றன.
பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, விருதும் கோப்பைகளும் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.
பொங்கலின் வரலாற்றுச் சிறப்பைப் பற்றியும், இந்தியர்களின் மரபைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்வதற்கு இவ்விழா ஒரு நல்ல தளமாக அமைந்தது என்று மேரிமவுண்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு குறிப்பிட்டார். கடந்த ஈராண்டுகளாக இணையம் வழி மட்டுமே நடத்தப்பட்ட பொங்கல் நிகழ்வுகளிலிருந்து இது மாறுபட்டது.
செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி

