பூக்களில் இது புலி

பூக்களில் இது புலி

2 mins read
deb9aca6-36c7-4ca8-939c-3429210039d6
மரத்தைத் தொற்றியபடி வளரும் தன்மையுள்ள புலி ஆர்க்கிட், ஆனாலும் உணவிற்காக அதனைச் சார்ந்து இருப்பதில்லை.மஞ்சள்நிற இதழ்களில் பழுப்புத் திட்டுகள் காணப்படுவதே இம்மலருக்குப் 'புலி ஆர்க்கிட்' எனப் பெயர் சூட்டப்பட காரணம். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

இன்று சீனர்களின் சந்­தி­ரப் புத்­தாண்டு நாள். அது­வும் புலி ஆண்­டின் முதல் நாள்!

புலி­களை நினை­வு­கூ­ரும் இந்­நா­ளில், சிங்­கப்­பூ­ரின் தேசிய மல­ரான ஆர்க்­கிட்­டி­லும் ஒரு புலி இனம் இருப்­பது வியப்­ப­ளிக்­கும் தக­வல்.

சிங்­கப்­பூ­ரில் புலி­கள் ஒவ்­வொன்­றாக இறந்த நிலை­யில், அவற்­றின் நினை­வா­கப் பெயர் சூட்­டப்­பட்ட 'புலி ஆர்க்­கிட்' மலர் தேசிய பூங்­காக் கழ­கத்­தால் வெற்­றி­க­ர­மாக மறு­அ­றி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

நன்கு வளர்ந்த புலி ஆர்க்­கிட் தாவ­ரம், ஒரு டன்­னுக்­கும் மேல் எடை­கொண்­ட­தாக இருக்­கும். உல­கில் இப்­போ­துள்ள ஆர்க்­கிட் இனங்­களில் ஆகப் பெரி­ய­தும் உய­ர­மா­ன­தும் இது­தான்.

புலித்­தோ­லில் காணப்­ப­டு­வ­து­போல, இந்த ஆர்க்­கிட் மல­ரின் மஞ்­சள் இதழ்­களில் பழுப்­பு­நி­றத் திட்­டு­கள் இருப்­ப­த­னால் இதற்­குப் 'புலி ஆர்க்­கிட்' எனப் பெயர் சூட்­டப்­பட்­டது.

இவ்­வகை ஆர்க்­கிட் இனத்­தைக் கண்­கா­ணிக்­க­வும் பாது­காக்­க­வும் தேசிய அள­வில் ஒரு திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கப் பூங்­காக் கழ­கத்­தைச் சேர்ந்த திரு­வாட்டி தெரீஸ் சூ கூறி­னார்.

அதன் கார­ண­மாக இப்­போது சிங்­கப்­பூ­ரில் கேலாங் பூங்கா இணைப்­புப்­பாதை, ஜூரோங் லேக் தோட்­டங்­கள், பாசிர் ரிஸ் பூங்கா, சுங்கை பூலோ சதுப்­பு­நி­லக் காடு­கள் உட்­பட்ட இடங்­களில் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட புலி ஆர்க்­கிட் தாவ­ரங்­கள் காணப்­ப­டு­கின்­றன.

1900களில், வாழிட இழப்பு கார­ண­மாக இந்த ஆர்க்­கிட் இனம் காடு­களில் அரு­கிப்­போ­னது.

இத­னை­ய­டுத்து, ஆர்க்­கிட் பாது­காப்­புத் திட்­டத்­தைச் சிங்­கப்­பூர் பூமலை ஏற்­ப­டுத்­தி­யது. அதன்­படி, சாலை­யோர மரங்­கள் போன்ற வாழி­டங்­க­ளி­லும் பூங்­காக்­க­ளி­லும் புலி ஆர்க்­கிட் மலர் இனத்தை மறு­அறி­மு­கம் செய்­யும் முயற்சி 1995ஆம் ஆண்­டில் தொடங்­கி­யது.

நான்­காண்­டு­க­ளுக்­குப்பின், புலி ஆர்க்­கிட் நாற்­று­கள் தோட்­டங்­களி­லும் புலாவ் உபின், புக்­கிட் தீமா இயற்­கைப் பாது­காப்பு வனப்­பகு­தி­யில் உள்ள வரு­கை­யா­ளர் மையம் ஆகிய இடங்­களில் நடப்­பட்­டன.

புலி ஆர்க்­கிட் பூக்­கும் தன்­மை­யைக் கணிக்க முடி­யாது என்­றும் சில நேரங்­களில் ஆண்­டுக்கு ஒரு­முறை மட்­டுமே பூக்­கும் என்­றும் டாக்­டர் சூ சொன்­னார்.

ஹாலந்து சாலை, கென்ட் ரிட்ஜ் பூங்கா போன்ற இடங்­களில் நடப்­பட்டு பத்து ஆண்­டு­க­ளுக்­குப்பின், 2013 மார்ச்­சில் புலி ஆர்க்­கிட் முதன்­மு­றை­யா­கப் பூத்­தது.

"மழைக்­கா­லம் முடிந்து, பின் வெயில் தொடங்கி, வறண்ட சூழல் நில­வும்­போது புலி ஆர்க்­கிட் பூப்­பதைக் காண முடி­கிறது. ஒவ்­வொரு பூங்­கொத்­தும் ஒரு மாதத்­திற்­கு­மேல் வாடா­மல் இருக்­கும்," என்­றார் டாக்­டர் சூ.

புலி ஆர்க்­கிட் மற்ற தாவ­ரங்­களை அல்­லது மரங்­க­ளைத் தொற்­றிக்­கொண்டு வள­ரும் என்­றா­லும் உண­விற்­காக அவற்­றைச் சார்ந்­து­இருப்­ப­தில்லை.

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய புலி ஆர்க்­கிட் தாவ­ரத்­தைப் பூம­லை­யில் காண­லாம். கிட்­டத்­தட்ட ஐந்து மீட்­டர் விட்­டம் கொண்ட அந்த ஆர்க்­கிட் தொகுதி, 150 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக அதே இடத்­தி­லேயே வளர்ந்து வரு­கிறது.