துண்டான கால் மீண்டும் உண்டானது; மனிதர்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள ஆய்வு

துண்டான கால் மீண்டும் உண்டானது; மனிதர்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள ஆய்வு

2 mins read
e56df423-2a7b-45f6-b2c0-1753adafb9b4
இழந்த காலைக் கிட்டத்தட்ட மீண்டும் முழுமையாகப் பெற்ற தவளை. படம்: டஃப்ட்ஸ் பல்கலைக்கழகம்/சயின்ஸ் அட்வான்ஸ் -
multi-img1 of 2

தவ­ளை­யின் துண்­டான காலை மருந்­துக் கல­வை­யின் துணையால் மீண்­டும் வள­ரச் செய்து அமெ­ரிக்க அறி­வியல் ஆய்வாளர்கள் சாதனை படைத்­துள்­ள­னர்.

வெறும் 24 மணி நேரமே நீடித்த சிகிச்­சைக்­குப் பின், 18 மாதங்­கள் கழித்து இந்த ஆப்­பி­ரிக்க இனத் தவ­ளை­யின் துண்­டான கால் மீண்­டும் வளர்ந்­தது.

தவ­ளை­க­ளுக்­கும் மனி­தர்­க­ளுக்­கும் இடையே பெரும் வேறு­பா­டு­கள் இருந்­தா­லும், மனி­தர்­க­ளி­டத்­தில் வெட்­டுப்­பட்ட கை கால்­க­ளைத் திரும்­ப­வும் வள­ரச் செய்ய முடி­யும் எனும் நம்­பிக்­கையை இந்த ஆய்வு ஏற்­ப­டுத்தி இருக்­கிறது.

"நாங்­கள் தேர்­வு­செய்த மருந்து­கள், கிட்­டத்­தட்ட முழு­மை­யான காலை உரு­வாக்கி இருப்­ப­தைக் காண்­பது மிகுந்த உற்­சா­கம் தரு­வதாக உள்­ளது," என்­றார் இந்த ஆய்­வில் பெரும்பங்கு ஆற்றிய டாக்­டர் நிரோஷா முரு­கன் (பெட்டிச் செய்­தி­யில் படம்).

ஐந்­து­வித மருந்­து­க­ளைப் புர­தக் களி­மத்­து­டன் சேர்த்து, அவற்றை 'பயோ­டோம்' எனும் ஒரு சிலிக்­கான் குப்­பி­யில் இட்டு, துண்­டான காலு­டன் ஆய்­வா­ளர்­கள் கட்­டி­னர்.

கிட்­டத்­தட்ட முழு­மை­யாக மீண்­டும் வளர்ந்த தவ­ளை­யின் காலில் எலும்பு இல்­லாத விரல்­களும் உண்­டா­யின.

மீண்­டும் வளர்ந்த கால் அசை­வ­தா­க­வும் அத­னைத் தொட்­ட­போது எதிர்­வினை ஆற்­றி­ய­தா­க­வும் ஆய்­வா­ளர்­கள் கூறி­னர்.

அமெ­ரிக்­கா­வின் டஃப்ட்ஸ் மற்­றும் ஹார்­வர்டு பல்­க­லைக்­க­ழ­­கங்­களைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் இந்த ஆய்­வில் பங்­கெ­டுத்­த­னர்.

"தவ­ளை­யின் துண்­டான கால் மீண்­டும் உரு­வாக பல மாத­கா­லம் ஆன­போ­தும் குறு­கிய காலமே அதற்கு மருந்து தேவைப்­பட்­டது. தவ­ளை­க­ளிலும் மற்ற விலங்கு­களி­லும் மீளு­ரு­வாக்­கம் என்­பது செய­லற்ற நிலை­யில் இருக்­க­லாம் என்­பதை­யும் அத­னைத் தூண்ட முடி­யும் என்­ப­தை­யும் இது காட்­டு­கிறது," என்­றார் டாக்­டர் நிரோஷா.

நட்­சத்­திர மீன், நண்டு, பல்லி போன்ற பல உயி­ரி­னங்­க­ளுக்கு, அவற்­றின் கைகால் துண்­டா­னால் அவற்றை மீண்­டும் உரு­வாக்­கிக்­கொள்­ளும் ஆற்­றல் உண்டு. தட்­டைப்­புழு போன்ற வேறு சில உயி­ரி­னங்­க­ளைத் துண்­டு­துண்­டாக்­கினா­லும் அவை ஒவ்­வொன்­றும் மீண்­டும் ஒரு முழு உயி­ரி­யாக உரு­வெ­டுக்­கும் திறன் படைத்­தவை.

ஆனால், மனி­தர்­க­ளுக்கு அத்­த­கைய ஆற்­றல் இல்லை. 50 விழுக்­காட்டை இழந்­து­விட்­டா­லும் மீண்­டும் அதனை உரு­வாக்­கிக்­கொள்­ளும் ஆற்­றல் கல்­லீ­ர­லுக்கு மட்­டுமே உண்டு.

கனடாவில் உன்னத விருது பெற்ற இந்திய வம்சாவளி அறிவியலாளர்

கன­டா­வில் கல்­லூரி, பல்­க­லைக்­க­ழக அள­வில் அறி­வி­ய­லில் அருஞ்­சா­தனை படைப்­போ­ருக்கு ஆண்­டு­தோ­றும் உன்­னத விரு­து­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

அவ்­வ­கை­யில், அண்­மை­யில் தம்­மு­டைய புத்­தாக்­க­மிக்க ஆய்­வுப் பணிக்­கா­க­வும் ஆசி­ரி­யப் பணி­யில் உன்­ன­த­நி­லை­யு­டன் விளங்கி வரு­வ­தற்­கா­க­வும் இந்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த டாக்­டர் நிரோஷா முரு­க­னுக்கு (படம்) 'வளர்ந்து வரும் நட்­சத்­தி­ரம்' எனும் விரு­தைக் கன­டிய அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

"சிறப்­பு­மிக்க இவ்­வி­ருது கிடைத்­தி­ருப்­பதை மிகுந்த கௌர­வ­மா­கக் கரு­து­கி­றேன். ஆய்­வா­ள­ராக தொடக்க கட்­டத்­தில் இருந்­த­போ­தும் இந்த விரு­துக்கு என்னை முன்­மொ­ழிந்­தோ­ருக்­கும் எனக்­குத் தொடர்ந்து ஆத­ர­வ­ளித்து வரு­வோ­ருக்­கும் மிகுந்த நன்­றி­யு­டை­ய­வ­ளா­கி­றேன்," என்­றார், அல­கோமா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உயி­ரி­யல் துறை­யில் இணைப் பேரா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி வரும் டாக்­டர் நிரோஷா.