ஆகாரத்தில் அதிக காரம் ஆகாது

ஆகாரத்தில் அதிக காரம் ஆகாது

2 mins read
2cd426df-00e2-43d5-864b-b89292683148
-

மற்ற நாடு­க­ளை­விட, இந்­தி­யர்­கள் தங்­க­ளது உண­வில் மிகு­தி­யா­கக் காரம் சேர்த்­துக்­கொள்­கின்­ற­னர். அதைத் தவிர்ப்­பது பல­ரா­லும் முடி­யாது. ஆனா­லும், அள­விற்கு மிஞ்சி­னால் அமு­த­மும் நஞ்சு எனும் பழ­மொழி காரத்­திற்­கும் பொருந்­தும்.

"ஒரு­வ­ரின் உடல் ஏற்­றுக்­கொள்­ளக்­கூடிய அள­வைக் காட்­டி­லும் அதி­க­மான காரம் சேர்த்­துக்­கொள்­ளும்­போது, வாய்ப்­புண் முதல் வயிற்­றுப்­புண்­வரை அது பல உடல்­நலக் கோளா­று­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும். வேறு நோய்­கள் இருப்­பின், உண­வில் அதிக காரம் சேர்த்­துக்­கொள்­வது இன்­னும் பல மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­வி­டும்," என்­கி­றார் ஹைத­ரா­பாத்­தில் உள்ள 'கேர் மருத்­து­வ­மனை'யின் தலைமை மருத்­துவ ஊட்­டச்­சத்து நிபு­ணர் டாக்­டர் சுஷ்மா.

காரம் மிகுந்த உண­வுப்­பொ­ருள்­களை உட்­கொள்­வது எந்­தெந்த வழி­களில் உட­லைப் பாதிக்­கும் என்று அவ­ரி­டம் 'நியூ இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்' கேட்­டது.

அதற்கு, "அதிக அள­வில் காரம் சேர்த்­துக்­கொள்­வது உண­வுக்­கு­ழா­யின் மேல் அடுக்கை அரித்­து­வி­டும். சில வேளை­யில் குடற்­ப­கு­தி­யை­யும் அரித்­து­வி­டும். வயிற்­றுப்­போக்கு, புளிப்­புத்­தன்மை, வயிற்­றில் எரிச்­சல் ஆகி­யவை அதிக காரம் சேர்ப்­ப­தால் ஏற்­படும் பொது­வான பிரச்­சி­னை­கள்," என்று டாக்­டர் சுஷ்மா பதி­ல­ளித்­தார்.

எவ்­வ­ளவு காரம் சேர்த்­துக்­கொள்­ள­லாம்?

"ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் அந்த அளவு வேறு­படும். ஒரு­வர் வள­ரும்­போது எத்­த­கைய உணவை உண்­கி­றார் என்­ப­தைப் பொறுத்­து அது அமை­யும். எடுத்­துக்­காட்­டாக, வட­ இந்­தி­யர்­க­ளைக் காட்­டி­லும் தென்­னிந்­தி­யர்­களின் உடல் அதிக காரத்தை ஏற்­றுக்­கொள்­ளும். திடீ­ரென மிகு­தி­யாக அதைச் சேர்த்­துக்­கொள்­ளும்­போது பிரச்­சினை ஏற்­ப­டு­கிறது. உடல் ஏற்­றுக்­கொள்­ளா­வி­டில் அந்த உண­வுப்­பொ­ருளை உட்­கொள்­வதை நிறுத்தி­வி­டு­வதே நல்­லது. உங்­கள் உடல் சொல்­வதைக் கேளுங்­கள்," என்­கி­றார் ஹைத­ரா­பாத் அப்­போலோ மருத்­து­வ­ம­னை­யின் தலைமை ஊட்­டச்­சத்து நிபு­ணர் டாக்­டர் ஹரிதா ஷியாம்.

தங்­க­ளுக்­குப் பிடித்­த­மான கார­மான உண­வு­வ­கை­களை எப்­போ­தா­வது எடுத்­துக்­கொள்­ள­லாம் என்­கி­றார் அவர்.

"எப்­போ­தா­வது சாப்­பிட்­டால் பிரச்­சினை இல்லை. இரண்டு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை அத­னைச் சாப்­பி­டுங்­கள். அந்த உண­வு­ வகைகள் நாவூற வைப்­ப­தாக இருந்­தா­லும், உண்­ட­பின் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தி­வி­டும். காரமான உண­வு­வகைக­ளைத் தொடர்ந்து எடுத்­துக்­கொண்டால், அவை இரைப்­பை­யிலும் குட­லி­லும் மோச­மான பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்திவிட­லாம்," என்று டாக்­டர் ஹரிதா எச்­ச­ரித்­தார்.

மருத்­து­வக் குண­மிக்க மண­மூட்­டி­கள்

பெரும்­பா­லான மண­மூட்­டி­கள் (Spices) மருத்­து­வக் குணம் கொண்­டவை என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர். ஆனால், அவற்றை எந்த அள­வில், எந்த முறை­யில் சேர்த்­துக்­கொள்­கி­றோம் என்­ப­தில் கவ­னம் தேவை என்­பது அவர்­க­ளின் கருத்து.

"மண­மூட்­டி­களை மித­மான அள­வில், நன்­றா­கச் சமைத்­த­பின் உட்­கொள்­வது அற்புதமான ப­லன்­களை அளிக்­கும். சமைக்­கும்­போது ஏலக்­காய், இல­வங்­கம், கிராம்பு ஆகி­ய­வற்றை எண்­ணெய்­யில் நேர­டி­யா­கச் சேர்க்­க­வும். அவற்­றில் நார்ச்­சத்­து­ம் ஆன்டி­ஆக்­சி­டென்­டு­களும் அதி­கம். அவை உடல் எடை­யைக் குறைக்க உத­வும்.

"மஞ்சளும் இஞ்சியும் மருத்துவப் பண்புகள் மிக்கவை. இஞ்சியைத் தேநீரில் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளைப்பூண்டில் இதய நோயாளிகளுக்கு நற்பலன் தரக்கூடிய 'அலிசின்' எனும் வேதிப்பொருள் உள்ளது. ஆயினும், அதிகமான மிளகாய்த்தூள், அல்லது பச்சை மிளகாய் மனிதக் குடலுக்கு நல்லதல்ல," என்றார் டாக்டர் சுஷ்மா.

"ஒரு­வ­ருக்கு உண­வாக இருப்­பது இன்­னொ­ரு­வ­ருக்கு நஞ்­சாக இருக்­க­லாம். வெள்­ள­ரிக்­காய்­கூட ஒரு­வ­ருக்கு வயிற்று­வலியை ஏற்­ப­டுத்­தி­வி­ட­லாம். அத­னால், ஒரு­வர் தமது உட­ல­மைப்பை அறிந்­து­கொண்டு, அதற்­கேற்ற உணவை உட்­கொள்­வது நல்­லது," என்­றார் டாக்டர் ஹரிதா.