உடற்பயிற்சி செய்வதை நிறுத்தப் போகிறீர்களா? இந்த முடிவால் உங்களின் மூளைக்கும் உடலுக்கும் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதை அதற்கு முன்னர் நீங்கள் அறிந்திட வேண்டும்.
மன அழுத்தம் ஏற்படும்
அபாயம் அதிகரிக்கக்கூடும்
உடற்பயிற்சி செய்தபோது மூளைக்குச் சென்ற ரத்த அளவு, உடற்பயிற்சியை நிறுத்தும்போது குறைந்திருக்கும். இதனால் மூன்றே நாள்களில் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் தோன்றலாம் என்று 'யுனிவர்சிட்டி ஆஃப் அடிலெய்ட்' நடத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
ரத்த அழுத்தம்
அதிகரிக்கக்கூடும்
உடற்பயிற்சியை நிறுத்திய இரண்டு வாரங்களில் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்று தென்னாப்பிரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ரத்த இனிப்பளவின்
கட்டுப்பாட்டை இழக்கக்கூடும்
ரத்த இனிப்பளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் உடல் பருமன், களைப்பு, நாள்பட்ட நோய்கள் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். உடற்பயிற்சியை நிறுத்தினால் இந்த அறிகுறிகள் தலைகாட்டத் தொடங்கும்.
உடல் எடை அதிகரிக்கக்கூடும்
உடற்பயிற்சியை நிறுத்தும்போது அதுவரை நீங்கள் உட்கொண்ட உணவின் அளவைத் தொடர்ந்தால் உங்களின் உடல் எடை அதிகரிக்கலாம் என்று நியூ யார்க் உடற்பயிற்சி நிபுணர் ஜேம்ஸ் ஷபீரோ கூறுகிறார்.
தசைகள் சுருங்கக்கூடும்
உடற்பயிற்சி இன்றி தசை எடையும் எலும்பு ஆரோக்கியமும் குறையும். எளிதில் திரும்ப இவற்றைப் பெறவும் முடியாது. இந்நிலையில், கடும் காயங்கள் ஏற்படும் சாத்தியமும் அதிகரிக்கும் என்று அமெரிக்க எலும்பியல் துறை நிபுணர் மிஹோ தனக்கா கூறுகிறார்.
எலும்புகள் வலுவிழக்கக்கூடும்
நடப்பது, மெதுவோட்டம் ஓடுவது, எடை தூக்குவது போன்றவற்றால் எலும்பை வலுவாக்குகிறோம். அதனால் உடற்பயிற்சியை நிறுத்தும்போது எலும்புப்புரை நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என்று 'மேயோ கிளினிக்' கூறுகிறது.

