கி ஜனார்த்தனன்
நவீனமயமாகும் சிங்கப்பூர் நகரக் காட்சியில் இரண்டாம் உலகப் போரின்போது நடந்த ஜப்பானியப் படையெடுப்புடன் தொடர்புடைய இடங்கள் இன்றும் உள்ளன. போர்க்காலத்தின்போது சிங்கப்பூரில் இருந்தவர்களின் மீள்திறனுக்கும் அஞ்சாமைக்கும் சாட்சியாகத் திகழும் இந்த இடங்களில், படையெடுப்பின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சுற்றுலாக்கள் நடத்தப்பட்டு
வருகின்றன.
சாங்கி தேவாலயம்,
அரும்பொருளகம்
இரண்டாம் உலகப்போரின்போது சிறையிடப்பட்ட பிரிட்டிஷ் படை யினர் மற்றும் மேற்கத்திய கூட்டுப்படையினர் கட்டிய பல்வேறு தேவாலயங்களில் இதுவும் ஒன்று. இந்தத் தேவாலயம் சாங்கி சிறைக்குள்ளேயே கட்டப்பட்டது. இந்த தேவாலயத்திற்குள் இருக்கும் எட்டு கலைக்கூடங்களில் 114க்கும் அதிகமான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தேதி: பிப்ரவரி 19ஆம் தேதி
நேரம்: காலை 9.30-11.45 மணி, காலை 10.45- பகல் 1 மணி வரை
179 பிக்காடில்லி
பிரிட்டிஷ் ஆகாயப்படையின் தலைமையகமாகவும் நிரந்தரக் கட்டடங்களில் ஆகப் பழையதாகவும் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது சிலேத்தாரிலுள்ள ஆகாயப்படைதான் மலாயாவையும் சிங்கப்பூரையும் தற்காத்தது. ஜப்பானியர்கள் ஆக்கிரமித்தபோது இந்த இடம் அவர்களது கடற்படை தலைமையகமாக மாறியது.
தேதி: பிப்ரவரி 12, 13, 19, 20, 26, 27ஆம் தேதிகள்
நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை
முன்னாள் ஃபோர்டு தொழிற்சாலை
முன்னாள் ஃபோர்டு தொழிற்சாலையை இரண்டாம் உலகப் போரின்போது விமானங்களை உருவாக்குவதற்காகப் பயன்படுத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எண்ணி னர். ஆயினும், அந்த நோக்கம் ஈடேறாமல் ஜப்பானியர்கள் அந்தத் தொழிற்சாலையை ஆக்கிரமித்தனர். இத்தொழிற்சாலையைச் சுற்றி பிரிட்டிஷ் துருப்பினருக்கும் ஜப்பானியத் துருப்பினருக்கும் இடையே சண்டைகள் நடந்தன. தொழிற்சாலையைக் கைப்பற்றிய ஜப்பானியர்கள், லாரிகளையும் இதர மோட்டார் வாகனங்களையும் உருவாக்குவதற்காக நிசான் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். அங்கு தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஆசியாவில் ஜப்பான் ஆதிக்கம் செலுத்திய பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டன.
தேதி: பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை.
கில்மன் ராணுவ முகாம்
தற்போது கலைகளுக்கான நிலையமாகத் திகழும் கில்மன் ராணுவ முகாமில் பிரிட்டிஷ் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் முன்னர் தங்கியிருந்தனர். படை எடுப்பின்போது இங்கும் பலத்த யுத்தம் நடந்தது.
தேதி: பிப்ரவரி 12, 19, 26 மற்றும் மார்ச் 5ஆம் தேதிகள்
நேரம்: மாலை 5 மணி
இந்தச் சுற்றுலாக்களுக்குச் செல்ல ஆர்வமுள்ளோர், தேசிய கலைகள் மன்றத்தின் இணையப் பக்கத்தை நாடவும்.

