தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரத்த சோகை வராமல் தடுக்க உதவும் கறிவேப்பிலை இட்லிப் பொடி

1 mins read
b304aecc-b6b7-4e9f-904c-ace16b3fc671
சுவையான கறிவேப்பிலை இட்லிப் பொடி. படம்: மாலை மலர் இணையம் -

ரத்த சோகைக்கு முக்­கிய கார­ணம், இரும்­புச்­சத்துக் குறை­பாடு.

அத­னால் இரும்­புச்சத்து உள்ள உண­வு­களைச் சாப்­பிட்டால் ரத்த சோகையை குறைக்க முடி­யும்.

தின­மும் 10 கறி­வேப்­பி­லையை சாப்­பிட்டு வந்­தால் ரத்த சோகை நோய் வரா­மல் தடுக்­க­வும் வாய்ப்பு உள்­ளது. கறிேவப்­பி­லையை வெறு மனே சாப்­பிட முடி­யா­த­வர்­கள் கறி வேப்­பிலை சேர்த்து செய்­யப்­பட்ட உண­வு­களை எடுத்­துக் கொள்ள லாம். கறி­வேப்­பிலை இட்லிப் பொடி செய்து இட்லி, தோசை மற்­றும் காலை உண­வு­களில் சேர்த்­துக் கொள்­ள­லாம்.

தேவை­யான பொருட்­கள்:

மிளகு ஒரு தேக்­க­ரண்டி, காய்ந்த மிள­காய் 4, பெருங்­கா­யம் சிறிது, சிறி­த­ளவு புளி, உப்பு தேவையான அளவு, உளுத்­தம் ­பருப்பு ஒரு தேக்கரண்டி, தேங்­காய் எண்­ணெய் சிறி­த­ளவு, கொத்­த­மல்லி விதை ஒரு தேக்­க­ரண்டி.

அடுப்­பில் வாண­லியை வைத்து தேங்­காய் எண்­ணெய் விட்டு காய­வைக்க வேண்­டும். எண்­ணெய் சூடான பிறகு மிளகு, காய்ந்த மிள­காய், உளுத்­தம்­ப­ருப்பு, உப்பு, புளி, கொத்­த­மல்லி விதை ஆகி­ய­வற்­றைப் போட்டு நன்கு வதக்க வேண்­டும். பிறகு அடுப்­பினை அணைத்­து­விட்டு அந்த சூட்­டி­லேயே கறி­வேப்­பி­லையை வாண­லி­யில் போட்டு லேசா­கப் பிரட்ட வேண்­டும். அத்­து­டன் பெருங்­கா­யத்­தூள் சேர்த்து மிக்­ஸி­யில் போட்டு நன்கு பொடி­யாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்­டும்.

கறி­வேப்­பிலை இட்லிப் பொடியை கண்­ணாடி டப்­பா­வில் போட்டு வைத்­தால் ஒரு மாதம் வரை­கூட கெடா­மல் இருக்­கும். இட்லி, தோசை, உப்­புமா, பொங்­கல் உள்­ளிட்ட காலை உண­வு­களில் சேர்த்து சாப்­பி­ட­லாம்.