தமிழிசைப் பள்ளியின் நூல் வெளியீடு, இசை நிகழ்ச்சி இன்று

தமிழிசைப் பள்ளியின் நூல் வெளியீடு, இசை நிகழ்ச்சி இன்று

1 mins read
45f59d06-7f4f-4128-bbd1-d9ac6a69d9f9
பாம்பே வி. ஆனந்த் -
multi-img1 of 3

சிங்­கப்­பூ­ரின் தமி­ழி­சைப் பள்ளி, இவ்­வாண்டு விழா­வு­டன் தமி­ழி­சை­யி­யல் பாட­நூல்­களையும் வெளி­யீடு ­கிறது.

இன்று காலை 9.30 மணி­ய­ள­வில் ஈசூன் மகா­மா­ரி­யம்­மன் ஆலய திரு­மண மண்­ட­பத்­தில் நிகழ்ச்சி தொடங்­கு­கிறது.

இந்­நி­கழ்ச்­சிக்கு பேரா­சி­ரி­யர் சுப. திண்­ணப்­பன் தலைமைேயற்­கி­றார். பாம்பே வி. ஆனந்த், பாப­நா­சம் சிவ­னின் பேரன் அசோக் ரமணி, கல்­லி­டைக்­கு­றிச்சி வி. சிவக்­கு­மார் ஆகி­யோர் கர்நாடக, தமி­ழிசையை பொழி­ய­வி­ருக்­கின்­ற­னர்.

தஞ்­சா­வூர்த் தமிழ்ப் பல்கலைக் ­க­ழக பண்­பாட்டு மையத்­தின் அங்கீ ­கா­ரம் பெற்ற தமி­ழி­சைப் பள்ளி நடத்­தும் நூல் வெளி­யீட்டு விழா­வுக்கு தமிழ் வர­லாற்று மர­பு­டை­மைக் கழ­கம் ஆத­ரவு அளித்­துள்­ளது. இந்த நிகழ்வை யூடி­யூப் (https://youtu.be/3VDYUs6Onqg) அல்­லது சூம் (Meeting ID: 823 7906 3275 Pass code: THHS2022) வழி­யா­கக் காண­லாம். விவ­ரங்­களுக்கு வனிதா (89277 107) அல்­லது செந்­தி­லு­டன் (9068 4267) தொடர்பு கொள்­ள­லாம். படங்கள்: தமிழிசைப்பள்ளி.