சிங்கப்பூரர்களின் சராசரி ஆயுட்காலம் கூடியுள்ளது. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி உள்ளூர் ஆடவர்களின் சராசரி ஆயுள்காலம் 81.5 ஆண்டுகள் என்றும் உள்ளூர் பெண்களின் சராசரி ஆயுள்காலம் 86.1 என்றும் புள்ளிவிவரத் துறைதெரிவித்துள்ளது.
அதே வேளையில், சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளும்
அதிகரித்துள்ளன.
சுகாதாரப் பராமரிப்புக்கான
பயனீட்டாளர் விலைக் குறியீடு 2001ஆம் ஆண்டில் 64.340ஆக இருந்தது. 2021ஆம் ஆண்டில் அது 99.579ஆக பதிவாகியுள்ளது.
இதன்படி, 2001ஆம் ஆண்டில் $10,000ஆக இருந்த சுகாதாரப் பராமரிப்பு சிகிச்சையை 2020ஆம் ஆண்டில் பெற கிட்டத்தட்ட $15,480 செலவாகி இருக்கும்.
வயது ஆக ஆக நோய் ஏற்படும் சாத்தியமும் குணமடைய எடுத்துக்கொள்ளப்படும் காலகட்டமும் அதிகரிக்கின்றன.
எனவே, முதியவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்தேவையான காப்புறுதித் திட்டங்
களைப் பெறுவது மிகவும் முக்கியம். முதுமையில் அவர்களுக்கு இது மனநிம்மதியை அளிக்கும்.
மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் போதுமானதா?
சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம் கட்டாயமானது. இதை மத்திய சேமநிதிக் கழகம் நிர்வகிக்கிறது.
அரசாங்க மருத்துவமனைகளின் 'பி2' அல்லது 'சி' பிரிவு அறைகளில் மானியம் வழங்கப்படும் சிகிச்சைகளுக்கான கட்டணங்
களைச் செலுத்த மெடிஷீல்டு காப்புறுதித் திட்டம் பயன்படுத்தப்படுகிறது. அரசாங்க, தனியார் மருத்துவமனைகளின் 'பி1', 'ஏ' பிரிவு அறைகளில் தங்கி சிகிச்சைப் பெறு
வோருக்கான கட்டணத்தின் ஒரு பகுதியைச் செலுத்த மெடிஷீல்டு லைஃப் பயன்படுத்தப்படுகிறது.
மெடிஷீல்டு லைஃப் காப்புறுதியின் அடிப்படைத் திட்டத்தை ஆயுள் முழுவதும் பயன்படுத்தலாம். மத்திய சேமநிதி பணத்தைப் பயன்
படுத்தி அதற்கான சந்தா தொகையைச் செலுத்தலாம்.
ஆனால் இது போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி
எழுகிறது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும் 'பி1' அல்லது 'ஏ' பிரிவு அறைகளில் தங்கி குணம் அடையவும் விரும்புவோர் தங்கள் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று டிபிஎஸ் வங்கியின் நிதித் திட்ட திறன் பிரிவின் தலைவர் திருவாட்டி கோர்னா டான் தெரிவித்தார்.
அதற்குத் தேவையான ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டு திட்டங்களை அவர்கள் பெற வேண்டும் என்றார் அவர்.
ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டு திட்டங்களைத் தனியார் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். 'பி1' அல்லது 'ஏ' பிரிவு அறைகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்தைப் பயன்
படுத்தி குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலுத்த முடியும்.
எஞ்சிய தொகையைச் செலுத்த ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டு திட்டங்களைப் பயன்படுத்தலாம். ஆனால் மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டத்துக்கான சந்தா தொகையைவிட ஒருங்கிணைக்கப்பட்ட ஷீல்டு திட்டங்களுக்கான சந்தா தொகை அதிகம். அதற்கான வருடாந்திர சந்தா தொகையை மெடிசேவ் மூலம் செலுத்தலாம்.
எல்டர்ஷீல்டு, கேர்ஷீல்டு லைஃப்
எல்டர்ஷீல்டும் அதன் மேம்படுத்தப்பட்ட அம்சமுமான கேர்ஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டமும் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கும் வழங்கப்படும் நீண்டகால உடற்குறை காப்புறுதித் திட்டங்களாகும்.
கடுமையான உடற்குறை ஏற்பட்டு அவதியுறுவோருக்கு இந்தத் திட்டங்கள் நிதி ஆதரவு வழங்குகின்றன.
தம்மைத் தாமே சுத்தப்படுத்திக்கொள்வது, ஆடைகளை அணிந்துகொள்வது, நடப்பது, சாப்பிடுவது, ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது, கழிவறையைப் பயன்படுத்துவது ஆகிய ஆறு நடவடிக்கைகளில் ஏதேனும் மூன்றைச் செய்ய முடியாமல் போகும் பட்சத்தில் கடுமையான உடற்
குறையுள்ளவர்கள் என எடுத்துக்கொள்ளப்படும்.
உடேற்குறையுள்ளோருக்குக் கூடுதல் மாதாந்திர உதவித் தொகையை கேர்ஷீல்டு லைஃப்
வழங்குகிறது.
2020ஆம் ஆண்டில் $600ஆகத் தொடங்கி படிப்படியாக இத்தொகை அதிகரிக்கும். ஆனால் எல்டர்ஷீல்டு 300 எல்டர்ஷீல்டு 400 ஆகிய திட்டங்கள் மாதந்தோறும் முறையே $300, $400 மட்டுமே வழங்கும்.
எல்டர்ஷீல்டு திட்டத்தின்கீழ் 60 மாதங்களிலிருந்து 72 மாதங்கள் வரை உடற்குறையுள்ளோருக்கான உதவித் தொகை வழங்கப்படும். ஆனால் கேர்ஷீல்டு லைஃப் மூலம் ஆயுட்காலம் முழுவதும் உதவித் தொகை கிடைக்கும்.
1980ஆம் ஆண்டில் அல்லது அதற்குப் பிறகு பிறந்த அனைத்து சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் 30 வயதானதும்
தானாகவே கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
அதற்கு முன்பு பிறந்தவர்
களுக்கு எல்டர்ஷீல்டு திட்டம் பயன்படுத்தப்படும். எல்டர்ஷீல்டு திட்டத்தில் இருப்பவர்கள் அதிலேயே இருக்கலாம். அல்லது கேர்ஷீல்டு லைஃப் திட்டத்துக்கு மாறலாம். இரண்டும் வேண்டாம் என்று கருதுபவர்கள் விலகிக்கொள்ளலாம். 1979ஆம் ஆண்டில், அதற்கு முன்பு பிறந்த சிங்கப்பூரர்கள் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேர்ந்தால் $2,500 வரையிலான சலுகைகளை அரசாங்கம் வழங்கும்.
மெர்டேக்கா அல்லது
முன்னோடித் தலைமுறையினர் கேர்ஷீல்டு லைஃப் திட்டத்தில் சேர்ந்தால் கூடுதலாக $1,500 சலுகை கிடைக்கும்.
சார்ந்திருப்போர் பாதுகாப்புத்
திட்டம்
21 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் நிரந்தரவாசிகளும் தங்கள் மத்திய சேமநிதிக் கணக்கில் முதல்முறையாகப் பணம் நிரப்பும்போது சார்ந்திருப்போர் பாதுகாப்புத் திட்டத்தில் தானாகவே சேர்க்கப்படுகின்றனர். இதில் சேர அவர்கள் பதிவு செய்யத் தேவையில்லை.
ஆனால் இத்திட்டத்தில் சேர விரும்பாதவர்கள் இதிலிருந்து
விலகிக்கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் இணைந்
திருப்போருக்கு மரணம், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய், முழுமையான-நிரந்தர உடற்குறை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் நிதி வழங்கீடு வழங்கப்படும். இத்திட்டத்தில் இணைந்திருப்போருக்கு அல்லது அவரது குடும்பத்தாருக்கு உதவ இந்தத் தொகை வழங்கப்
படுகிறது.
60 வயதுக்கும் குறைந்தவர்
களுக்கு $70,000 வழங்கப்படும். 60 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு $55,000 வழங்கப்படும்.
65 வயதானதும் அல்லது சார்ந்திருப்போர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வழங்கீட்டைப் பெற்றுவிட்டாலோ இத்திட்டத்தைத் தொடர முடியாது.
மத்திய சேமநிதியின் சாதாரண கணக்கு அல்லது சிறப்புக் கணக்கைப் பயன்படுத்தி சார்ந்திருப்போர் பாதுகாப்புத் திட்டத்துக்கான சந்தா தொகையைச் செலுத்தலாம்.
சார்ந்திருப்போர் பாதுகாப்புத் திட்டம் மிகவும் அடிப்படையானது என்றும் சார்ந்திருப்பவர்கள் இருந்து, வீட்டுக் கடன் இன்னும் அடைக்கப்படாமல் இருந்தால் அதன் மூலம் கிடைக்கும் தொகை போதுமானதாக இருக்காது என்றார் திருவாட்டி லோர்னா டான்.
தங்கள் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு காப்புறுதித் திட்டத்தை மேம்படுத்தி கூடுதல் அனுகூலம் பெறுவது குறித்து
மிகக் கவனமாக முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.
வீட்டுப் பாதுகாப்புத் திட்டம்
வீடமைப்பு வளர்ச்சிக் கழக
வீட்டுக்கான கடனை மாதந்தோறும் மத்திய சேமநிதிக் கணக்கு மூலமாகவோ அல்லது ரொக்க
மாகவோ அடைக்கும் மத்திய சேமநிதிக் கழக உறுப்பினர்களுக்கு இந்த வீட்டுப் பாதுகாப்புத் திட்டம் வழங்கப்படுகிறது. கடனை அடைப்பதற்குள் வீட்டு உரிமையாளர் மரணம் அடைந்தாலோ உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் ஏற்பட்டாலோ முழுமையான-நிரந்தர உடற்குறை ஏற்பட்டாலோ எஞ்சிய கடனை இந்தக் காப்புறுதித்
திட்டம் அடைத்துவிடும்.

