உண்ணாவிரதமும் ஆரோக்கிய உணவும்

3 mins read
438c6592-7243-468e-bdea-a4afbff8f9b1
விரதம் இருப்பதால் உடல்நலம் மேம்படுகிறது. ஆனால் எந்த வேளையில் எவ்வளவு நேரம் விரதம் இருக்கலாம் என்பது நபருக்கு நபர் மாறுபடும். விரதத்தின்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் தலைசுற்றல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கோப்புப் படம்: இணையம் -

உண­வின்றி உயிர் இல்லை. அதே சம­யத்­தில் குறிப்­பிட்ட காலத்­திற்கு சாப்­பி­டா­மல் உண்­ணா­வி­ர­தம் இருப்­பது உடல் உறுப்­பு­க­ளுக்குப் புத்­துணர்வைத் தருவதோடு அவற்­றின் இயக்­கத்தையும் சீராக்குகிறது.

விர­தம், வழக்­க­மாக 12 முதல் 24 மணி நேரம் வரை நீடிக்­கிறது. இடை­யி­டையே உண்­ணா­மல் இருப்­பது, நீர் விர­தம், பழ விர­தம் போன்ற பல்­வேறு வகை­யான விர­தங்­கள் இருக்­கின்­றன.

உண்­ணா­வி­ர­தத்­தின்­போது உடல் ஆரோக்­கி­யத்­தை­யும் கவ­னித்­துக்கொள்வது அவசியம். உட­லுக்­குத் தேவை­யான ஊட்­டச்­சத்து இல்லையென்றால் விரதம் இருந்து பயனில்லை.

ஊட்டச்சத்து குறைபாட்டால் சில­ருக்கு மயக்­கம், தலை­சுற்­றல் போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­ப­ட­லாம். இதனால் சிலர் விர­தம் இருப்பதையே கைவிட்டுவிடுகின்றனர்.

"உண்­ணா­வி­ர­தம் உங்­கள் உட­லுக்­கும் மன­ந­லத்­திற்­கும் அற்­பு­தங்­க­ளைச் செய்­கிறது," என்­கி­றார் ஆயுர்­வேத நிபு­ண­ரான டாக்­டர் டக்ஸா பவ்­சார்.

உட­லில் இருக்கும் நச்­சுத்­தன்­மையை வெளியேற்றி, செரி­மான உறுப்­பு­களை பல­ம­டையச் செய் கிறது.­

"உடல் பரு­ம­னைக் குறைக்­கிறது, அதிக கொழுப்பை கரைக்­கிறது, கல்­லீ­ரல் கோளா­று­க­ளைப் போக்க உத­வு­கிறது," என்று இன்ஸ்­ட­கி­ராம் பதி­வில் டாக்டர் பவ்சார் குறிப்பிட்டுள்ளார்.

தம்­மு­டைய தனிப்­பட்ட உண்ணா­ வி­ரத அனு­ப­வத்­தை­யும் பகிர்ந்­து­கொண்ட அவர், உணர்ச்சி மற்­றும் ஆன்­மிக வழி­யில் மன அமைதி கிடைத்­துள்­ள­தா­கக் கூறு­கி­றார்.

வெவ்வேறு விதமான விரதங்கள் நபருக்கு நபர் வித்தியாசமாக செயல்படும் என்று அவர் தெரி விக்கிறார்.

உணவு, தண்ணீர் அருந்தாமல் முழுமையாக விரதமிருப்பது ஒரு வகை, தண்ணீர் அல்லது பழச்சாறு மட்டும் குடிப்பது, மூலிகைச் சாறுகளை மட்டும் குடிப்பது, தானிய வகை உணவுகளை எடுத்துக் கொள்வது, இனிப்பு மற்றும் உப்பு இல்லாமல் சாப்பிடுவது என விரதம் வேறுபடுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களிலிருந்து விலகி யிருப்பது, எதிர்மறையான எண்ணங் களைத் தவிர்ப்பது, இடைப்பட்ட விரதம் உள்ளிட்ட விரதங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இடைப்பட்ட விரதம், உடல் எடையைக் குறைப்பது மட்டு மல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயுளையும் நீட்டிக்கச் செய்வதாகக் கூறப்படுகிறது.

இதில் குறிப்பிட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் விரதம் இருக்க வேண்டும்.

அதாவது, பிற்பகல் 12.00 மணி வரை விரதம், பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை சாப்பிடுவது, எட்டு மணிக்கு மேல் மீண்டும் விரதம் இருப்பது.

இந்த வகை விரதம், உடல் எடை மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க பாது காப்பான வழி என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இரவு 8.00 மணிக்குள் உணவு எடுத்துக்கொள்வதால் அஜீரணம் ஏற்படாமல் நல்ல உறக்கத்தை ஏற்படுத்துகிறது.

மூன்று வேளையும் மாவுச்சத்து உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

எந்த வகையான விரதமாக இருந்தாலும் உடலுக்குத் தேவை யான சத்துகள் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதற்காகவே ஆயுர்வேதத்தில் சில ஆரோக்கியமான உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

தேங்காய்த் தண்ணீர்-இது உடலுக்குப் புத்துணர்வைத் தரும். பழங்கள், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள், பால், தயிர், மோர், மரவள்ளிக்கிழங்கால் செய்யப்பட்ட கிச்சடி, கரும்புச் சாறு, பேரீச்சம் பழம் போன்றவை விரதத்தின்போது உடல் வலிமை குன்றாமல் இருக்கச் செய்யும்.

ஆனால் எது தங்களுடைய உடலுக்கு ஏற்ற உணவு என்பதை அறிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

விரதத்தின்போது நொறுக்குத் தீனிகளையும் ஆரோக்கியமற்ற உணவுகளையும் வாயில் தள்ளுவது உடல்நலத்திற்கு கேடு விளை விக்கும் என்று டாக்டர் பவ்சார் எச்சரிக்கிறார்.

சிப்ஸ், பொரித்த கோழி, கறி பஃப்ஸ் போன்ற பொரித்த உணவு வகைகளை தவிர்ப்பது மிக மிக முக்கியம்.

ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதால் பல கோளாறுகள் ஏற்படுகின்றன.

ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதற்குப் பதிலாக விரதம் இல்லாமலே இருந்து விடலாம் என்கிறார் டாக்டர் பவ்சார்.

(தகவல்: த இண்டியன் எக்ஸ்பிரஸ்)