மன அழுத்தத்தைக் குறைக்கும் வாசனைத் திரவியங்கள்

3 mins read
c267c9bf-5b5f-4454-b446-415f41ca6b79
-

தங்­க­ளு­டைய உட­லின் தன்­மைக்­கேற்­ப­வும், கால­நி­லையைப் பொறுத்தும் வாசனைத் திர­வி­யங்­களைத் தேர்ந்­தெ­டுத்துப் பயன்படுத்தவேண்­டும்.

வெயில் காலத்­தில் ெமன்மை யான வாச­னைத் திர­வி­யங்­க­ளை­யும் குளிர்­கா­லங்­களில் அதிக வாசனை தரக்­கூ­டிய திர­வி­யங்­களை­யும் பயன்­ப­டுத்த வேண்­டும்.

சந்­த­னம் அல்­லது மஞ்­ச­ளின் வாசத்தை நுகரும்­போது, ​​உங்­கள் மனம் தளர்வடையும். லாவெண்­டர், எலு­மிச்சை போன்ற வாச­னை­கள் உங்­க­ளின் செரோடோனின் உற்­பத்­தியை அதி­க­ரிக்­கும்.

இதே­போல், மன அழுத்­தத்தை தணிக்­கக்கூடிய, புத்­து­ணர்ச்­சி­யூட்­டும் ஐந்து வாச­னை­களும் உள்­ளன.

சந்­தனம்: சந்­த­னத்­தின் மணம் அமை­தியை ஊக்­கு­விப்பதால், மன அழுத்­தம் குறைக்­கிறது. சிறந்த தூக்­கத்­திற்­கும் வழி­வ­குக்­கிறது.

எலு­மிச்சை: எலு­மிச்­சை­யின் 'சிட்­ரஸ்' வாசனை உற்­சா­க­மாகவும் மனதை அமை­தி­யா­க­வும் புத்­து­ணர்ச்­சி­யு­டன் வைத்­தி­ருக்­க­வும் உத­வும் ஒரு வாச­மா­கும்.

மல்­லி­கைப்பூ: மல்­லி­கை­யின் வாசனை மன அழுத்ததைக் குறைக்கும் பண்­பு­க­ளைக் கொண்­டுள்­ளது. மனதைச் சீராக்­குவதுடன், உறக்­கத்­தைத் தூண்­டு­வ­தா­க­வும் நம்பப்ப­டு­கிறது.

வெட்­டி­வேர்: வெட்­டி­ேவ­ரின் வாசனை நம்மை மிக­வும் ஆழ­மாக சம­நி­லைப்­ப­டுத்­தி, மன அழுத்­தத்தைக் குறைக்­கிறது. இந்த வாசனை நல்ல தூக்­கத்தையும் ஓய்வையும் ஊக்­கு­விக்­கும்.

ரோஜா­: உல­கின் மிக­வும் பிர­ப­ல­மான வாச­னை­களில் ஒன்­றான ரோஜா, மன அழுத்­தத்தை நீக்­கும் வாச­னையை வெளிப்­ப­டுத்­து­வதோடு பதற்றத்தை எதிர்த்­துப் போரா­ட­வும் மன­து, உட­லை ஓய்வாக வைக்­க­வும் உத­வு­கிறது.

இந்த வாச­னை­கள் அனைத்தை யும் நுகர்­வதை விட, அவை­களில் ஏதே­னும் ஒன்­றின் மத்­தி­யில் அமர்ந்து தியா­னம் செய்­யும்­போது இந்த நறு­ம­ணங்­கள் இன்­னும் திறம்­படச் செயல்­படும்.

இதைத் தான் அரோ­மா­தெ­ரபி என்­கிறார்கள்.

சில வாச­னைத் திர­வி­யங்­கள் அதிக வாசனை கொண்­ட­வை­யாக இருக்­கும். பல­ருக்கு அதீத வாசனை பிடிக்­கா­மல் தலைச்சுற்­றல், தலை­வலி போன்­றவை வரும். அப்­ப­டி­யான வாச­னைத் திர­வி­யங்­களைத் தவிர்த்­து­விட வேண்­டும்.

வாசனைத் திர­வி­யங்­களைத் தேர்ந்­தெ­டுப்­பது குறித்து மீரா காந்தி வாசனை திர­விய நிறு­வ­னர் ரிட்­டிகா ஜடின் அஹுஜா சில ஆலோ­ச­னை­க­ளைக் கூறி­யுள்­ளார்.

கடைக்கு வெளியே வாச­னை­யைப் பரி­சோ­திக்க மறக்கவேண்­டாம்.

கடை­யின் குளிர் சாதன வசதியில் வாச­னை­யின் தரம் தெரியாது. எனவே, வெளி­யில் சென்று சோதித்­தால் உண்­மை­யான மணம் தெரியும்.

இல­கு­வான வாச­னையை விரும்­பி­னால், பூக்­க­ளின் நறு­ம­ணத்தை எடுத்­துக்­கொள்­ள­லாம். புதினா அல்­லது 'சிட்­ரஸ்' நறு­ம­ணங்­களையும் கூடத் தேர்வு செய்­ய­லாம். இவை புத்­து­ணர்ச்­சி­யூட்­டும். அதிக நறு­ம­ணத்தை விரும்­பி­னால் சாண்டல்வுட் (சந்­த­னம்) போன்­ற­வற்­றைத் தேர்ந்­தெ­டுக்­க­லாம்.

வாச­னைப் பொருட்­களை உப­யோ­கிக்­கும் போது முத­லில் மணிக்­கட்டு, இத­யத்­தின் நடுப்­ப­குதி, முழங்கை, காது பின்­ப­குதி, முழங்­கால்­க­ளுக்­குப் பின்­னால், முழங்­கை­யின் மடிப்­பு­கள் போன்ற பகு­தி­களில் லேசாக தட­வலாம். வாசனை ஆளைத் தூக்­கும்.

சிறு பஞ்­சு­களில் வாசனை திரவியத்தை தெளித்து உடை­களில் தட­விக் கொள்­ள­லாம்.

எந்­த­வொரு புது வகை வாசனையையும் முதன்முத­லாக உப­யோ­கிக்­கும் போது அதை மணிக்­கட்டு பகு­தி­யில் தெளித்து இரண்டு நிமி­டங்­கள் விட்­டுப் பாருங்­கள்.

எரிச்­சல், தோல் ஒவ்வாமை ஏதும் இல்லை எனில் அதனை கவ­லைப்­ப­டா­மல் உப­யோ­கிக்­க­லாம். வாசனைத் திரவியத்தை அதிகமாக போட்டுக்கொள்ளக் கூடாது. நகைகள், ஆடைகளில் பயன்படுத்தவும் கூடாது என்கிறார் ரிட்­டிகா ஜடின் அஹுஜா.

தகவல்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

படம்: ஊடகம்