பேசும் கலை வளர்ப்போம்

பேசும் கலை வளர்ப்போம்

1 mins read

ஜாலான் புசார் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வும், இளம்­பிறை இலக்­கிய வட்­ட­மும் பல்­சு­வை­ நி­கழ்­வாக பேசும் கலை வளர்ப்­போம் என்ற நிகழ்ச்­சி­யை நடத்தி வருகின்றன.

இந்நிகழ்வில், இம்­மா­தம் மாண­வர்­கள் தீக்­சிதா நாக­ரா­ஜன், மீரா ஜெயக்­கு­மார், நவ்­ஃபல்­துல்­கர்னை, முஹம்­மது மிக்­தாத், அர்­ஜூன் ஆனந்த், திரு அப்­துல் மாலிக், திரு­ம­தி­ வெண்­ணிலா கண்­ணன், திரு உமா­ஷங்­கர் ஆகியோர் வேறு­பட்ட தலைப்­பு­களில் பேசி­னர்.

சிறப்பு விருந்­தி­ன­ராகப் பங்­கேற்ற புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்ற அடித்­தளத் தலை­வர் திரு. பெ.மூர்த்தி இளை­யர்­க­ளி­டம் தமிழ்­மொ­ழியை வாழும்­மொ­ழி­யாக்க இந்­நி­கழ்ச்சி பாடு­ப­டு­வதாகப் பாராட்­டி­னார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­கழக மாண­வர் குமாரி அஷ்­வினி 'கனாக் காணும் காலம்' என்ற தலைப்­பில் பள்ளி முதல் பல்­கலைக் கழ­கம் வரையில் தனக்குக் கிடைத்த தன்­மே­டைப் பேச்சு அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார்.

பங்­கேற்ற மாண­வர்­க­ளுக்கு ஊக்­கப்­ப­ரி­சு­களும் சான்­றி­த­ழும் வழங்கப்பட்டன.

ஸூம் சந்திப்பில் 45 பேர் உட்­பட சமூக வலை­த்த­ளங்­கள் மூல­மும் அமெ­ரிக்கா, கனடா, மலே­சியா, தமி­ழ­கத்­தில் இருந்தும் பல­ரும் இணைந்து சிறப்­பித்­த­னர்.

செய்தி: அ. முஹம்மது பிலால்