தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமான நிலைய முனையத்தில் நாளை ரத்த நன்கொடை திரட்டு

2 mins read
1b0738ca-25c8-4270-9f21-4840d89014c9
இரத்த நன்கொடை முகாம். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ரத்த நன்கொடை செலுத்த விரும்புவோர் இந்த வாய்ப்பினை சாங்கி விமான நிலையத்தில் நாளை பெற முடியும்.

சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆதரவில் சாங்கி விமான நிலைய பொழுதுபோக்கு மன்றத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்த நன்கொடை திரட்டு நடைபெறும்.

சாங்கி விமான நிலைய முனையம் 2ன் மூன்றாம் தளத்தில் உள்ள சாங்கி விமான நிலைய பொழுதுபோக்கு மன்றத்தில் நடைபெறும் ரத்த நன்கொடைத் திரட்டில் பங்கேற்க செஞ்சிலுவைச் சங்கம் வரவேற்கிறது.

நன்­கொடை செலுத்த முன்­வ­ரு­வோர் 62200183 என்ற எண்ணை அழைத்து முன்­ப­திவு செய்­ய­வேண்­டும். நன்­கொடை செலுத்த வரும்­போது அனை­வ­ரும் தங்­கள் அடை­யாள அட்டை/வாக­ன­மோட்­டும் உரிம அட்டை/மாண­வர் அட்டை/ஒர்க் பெர்­மிட் ஆகி­ய­வற்­றில் ஏதா­வது ஒன்­றைக் கொண்டு வர­வேண்­டும்.

தற்­போ­தைய கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லால் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­கள் செயல்­ப­டுத்­தப்­படும். நன்­கொ­டை­யா­ளர்­கள் கட்­டங்­கட்­ட­மாக அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

விபத்து, அறு­வை சிகிச்சை மேற்­கொள்­வோர், இரத்­தத்­தில் உள்ள வெள்ளை அணுக்­க­ளைப் பாதிக்­கக்­கூ­டிய ஒரு வகைப் புற்று­நோய் மற்­றும் மரபு வழி ஏற்­படும் இரத்த பிரச்சினை, இரத்­தப் போக்கு ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளின் உயி­ரைக் காப்­ப­தற்கு இரத்­தம் தேவைப்­ப­டு­கிறது.

நாம் நன்கொடையாக அளிக்கும் ஓர் அலகு (யூனிட்) அளவு இரத்­தம் மூன்று உயிர்­க­ளைக் காப்­பாற்­றக் கூடி­யது.

நாம் அளிக்கும் இரத்த நன்கொடை, உயி­ருக்­குப் போரா­டும் எண்­ணற்ற நோயா­ளி­க­ளின் வாழ்வை நீட்­டிக்க முடி­யும்.

சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை ஒவ்­வொரு நாளும் ஒரு மணி நேரத்­திற்கு 15 அலகு அளவு இரத்­தம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

இரத்த மாற்­றம் செய்­து­கொள்­வோ­ருக்கு மட்­டும் நாள் ஒன்­றுக்கு 400 அலகு அளவு இரத்­தம் தேவைப்­ப­டு­கிறது என்­றால் ஓர் ஆண்­டுக்கு 120,000 அலகு அளவு இரத்­தம் நமக்­குத் தேவைப்­ப­டு­கிறது.

ஆண்டுதோறும் சுமார் 30,000 சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை தேவைப்­படு­வ­தாக செஞ்­சி­லு­வைச் சங்­கம் அண்­மை­யில் தெரி­வித்­தது. எனவே, நமது இரத்த வங்­கி­யில் எப்­போதும் இரத்­தம் இருப்­பில் இருக்­க­வேண்­டும். 16 வய­துக்­கும் 25 வய­துக்­கும் உட்­பட்ட இளை­யர்­கள் குறை­வான எண்­ணிக்­கை­யில் இரத்த தானம் செய்­வ­தா­கச் சிங்­கப்­பூர் செஞ்­சி­லு­வைச் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.