கலை மையமாகத் தொடர்ந்து இருக்கப் போராடும் 'கில்மன் பேரக்ஸ்'

கலை மையமாகத் தொடர்ந்து இருக்கப் போராடும் 'கில்மன் பேரக்ஸ்'

2 mins read
a91971f1-3e90-46c6-a5f1-8954f52631c2
'கில்­மன் பே­ரக்ஸ்' சிங்கப்பூர் நில ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது புதிய குத்தகைதாரர்களைத் தேடி வருவதாகக் கூறியுள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

கி.ஜனார்த்­த­னன்

சிங்­கப்­பூர் கலை வார­மான இந்த வாரத்­தின் தொடக்­கத்­தில் 'டிபிடி' (TPD) எனப்­படும் தஞ்­சோங் பகார் டிஸ்ட்­ரி­பார்க்­கைப் பற்றி ஊரெல்­லாம் ஒரே பேச்­சாக இருந்­தது. கவ­ன­மெல்­லாம் அங்கு திரும்­பும் நேரத்­தில், பச்சை பசு­மை­யான சூழ­லில் தற்­போது உள்ள 'கில்­மன் பேரக்ஸ்' புறக்­க­ணிக்­கப்­ப­டுமா என்­பது கலை ஆர்­வ­லர்­க­ளின் முக்­கிய கேள்­வி­யாக உள்­ளது.

அலெக்­சாண்­டிரா சாலைக்கு அரு­கி­லுள்ள இந்­தக் கலைக்­குழு மத்­தின் வருங்­கா­லத்­தைப் பற்றி பல­ரும் வின­வு­கின்­ற­னர்.

ஜப்­பா­னி­யப் படை­யெ­டுப்­புக் காலத்­தில் பிரிட்­டிஷ் படை­யின் ராணுவ முகா­மா­கச் செயல்­பட்டு வந்த 'கில்­மன் பேரக்ஸ்', 2012ஆம் ஆண்­டில் கலை மைய­மா­கத் தொடக்­கம் கண்­டது. தமிழ் கலா­சார நிகழ்ச்­சி­கள் உள்­ளிட்ட பல்­வேறு கலைப்­ப­டைப்­பு­க­ளுக்­கும் இது மேடை வழங்கி வரு­கிறது. சிங்­கப்­பூ­ரின் தென்­ப­கு­தி­யில் கிட்­டத்­தட்ட பத்து கிலோ­மீட்­டர் தொலை­வுக்கு நீளும் இயற்­கைப்­ப­கு­திக்கு அருகே அமைந்­துள்ள இந்த இடத்­திற்கு குத்­த­கை­யா­ளர்­களை வர­வேற்­ப­தாக இந்த இடத்தை நிர்­வ­கிக்­கும் சிங்­கப்­பூர் நில ஆணை­யம் தெரி­வித்­தது.

மிதி­வண்டி ஓட்­டு­ப­வர்­க­ளுக்­கும் இயற்கை ஆர்­வ­லர்­க­ளுக்­கும் இடையே இந்த இடம் மிக­வும் பிர­ப­ல­மாக இருப்­ப­தா­க­வும் ஆணை யம் குறிப்­பிட்­டது.

ஆயி­னும், இங்­குள்ள நீண்ட கால குத்­த­கை­யா­ளர்­க­ளின் ஆவல் குறைந்­துள்­ளது. அங்­குள்ள 17 கலைக்­கூ­டங்­களில் ஐந்து, தங்­க­ளது குத்­த­கையை நீட்­டிக்­கப்­போ­வ­தில்லை என அறி­வித்­தன.

குறைந்த வரு­கை­யா­ளர்­கள், சரிந்த விற்­பனை போன்ற கார­ணங்­க­ளால் சான்+ஓரி கான்­டெம்ப்­ரரி, சுல்­லி­வன்+ஸ்டி­ரம்ஃப் போன்ற கலைக் கூடங்­கள் 2020ல் வெளி­யே­றி­விட்­டன.

கடந்­தாண்டு மார்ச் மாதத்­தில் பெரி­தாக இருந்த புளோக் 43ன் குத்­த­கை­யா­ள­ரான என்­டியு தற்­கால கலை நிலை­யம் தனது கலைக் கூடத்தை மூடி வெளி­யே­றி­யது. முன்பு உண­வ­க­மா­க­வும் கேளிக்­கைக் கூட­மா­க­வும் செயல்­பட்ட டிம்­பர் கில்மேன் இருந்த 'புளோக் 9ஏ', கலைத்­து­றை­யில் இல்­லாத மற்ற வர்த்­த­கங்­க­ளுக்கு விடப்­பட்­டது. ஆனால், அந்த இட­மும் தொடர்ந்து காலி­யாக உள்­ளது.

"மக்­கள் வரு­கை­யால் களை கட்­டிய ஓர் இடம் இப்­படி காலி­யாக இருப்­ப­தைக் கண்டு வருத்­தம் அடை­கி­றோம்," என்று என்­டியு கலை நிலை­யத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இந்­தக் கலை மையத்­தில் தற்­போ­துள்ள ஆறு உணவு, பானத் துறை குத்­த­கை­யா­ளர்­கள், தாங்­கள் இருக்­கும் இடத்­திற்கு மீண்­டும் விண்­ணப்­பிக்­கும்­படி கேட்­கப்­பட்­டுள்­ள­னர். இது அவர்­க­ளுக்கு அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

"கலை மையம் என அறி­விக்­கப்­படும் ஓர் இடத்­தில் கலைக்­கூடங்­கள் அதி­கம் இருக்­க­வேண்­டும் என்­பது சில­ரின் கருத்து. உண­வ­கங்­கள் உள்­ளிட்ட வாழ்­வியல் வர்த்­த­கங்­கள் இருப்­பது நல்­லது என்­றா­லும் கவ­னம் கலை மீதும் கலைக்­கூ­டங்­க­ளின் மீதும் இருக்­க­வேண்­டும்," என்றார் 'சுந்­த­ரம் தாகூர் கலைக்­கூ­ட'த்தின் நிறு­வனர் சுந்­த­ரம் தாகூர். தமது குத்­த­கையை ஐந்தாண்­டு­களுக்கு நீட்­டிப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.