தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலக்கியம், சமூகம் இருகண்கள்

2 mins read
7be4a6df-3fcf-4f37-abf3-d1605cd1c5eb
டாக்டர் ஹிமானா சையத். -
multi-img1 of 3

தமி­ழு­ல­கத்­தின் மூத்த எழுத்­தா­ள­ரும் சமூக சேவ­க­ரு­மான டாக்­டர் ஹிமானா சையத், உடல்­ந­ல­மின்றி 21 பிப்­ர­வரி 2022 அன்று தமது 75வது வய­தில் சென்­னை­யில் கால­மா­னார். அவர் ஆற்­றிய தமிழ் இலக்­கி­யப் பணி­க­ளை­யும் சமூ­கப்­

ப­ணி­க­ளை­யும் நினை­வு­கூ­ரும் வகை­யில் ஜமால் முஹம்­மது கல்­லூரி முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம் (சிங்­கப்­பூர் கிளை) சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை (13 மார்ச்), இணை­யம் வழி­யாக அன்­னா­ரின் நினை­வேந்­தல் நிகழ்ச்­சியை நடத்­தி­யது.

இந்­நி­கழ்ச்­சி­யில் சங்­கத்­தின் தலை­வர் முனை­வர் மு.அ.காதர், சங்­கத்­தின் செய­லா­ளர் கணி­தப் பேரா­சி­ரி­யர் திரு. அமா­னுல்­லாஹ், பென்­கூ­லன் பள்­ளி­வா­ச­லின் நிர்­வா­கக் குழுத்­த­லை­வர் மு.முஹம்­மது ரஃபீக், 'செம்­மொழி' இத­ழா­சி­ரி­யர் திரு. மு. இலியாஸ், சிங்­கப்­பூர் முஸ்­லிம் லீக் சமூக நல்­லி­ணக்க அமைப்­பின் தலை­வர் 'புதிய நிலா' மு. ஜஹாங்­கீர், மலே­சியா நாணய மாற்று வணி­கர்­கள் சங்­கத்­தின் தலை­வர் முனை­வர் மு. முஹம்­மது சுஐபு, சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக் துணைத்­

த­லை­வர் திரு மு.அ.மசூது, சிங்­கப்­பூர் ஜாமியா அற­நி­று­வ­னத்­தின் துணைத்­த­லை­வர் முனை­வர் ஹெச். எம்.சலீம், மீடி­யா­கார்ப் சிங்­கப்­பூர்த் தொலைக்­காட்சி தமிழ்ச்­செய்தி மற்­றும் நடப்பு விவ­கா­ரப் பிரிவு மூத்த தயா­ரிப்­பா­ளர் திரு கே.ஹெச். எம். ஸதக்­கத்­துல்­லாஹ் ஆகி­யோர் டாக்­டர் ஹிமானா சையத் ஆற்­றிய தமிழ்ப்­ப­ணி­க­ளை­யும் சமூ­கப்­ப­ணி­

க­ளை­யும் நினை­வு­கூர்ந்­த­னர்.

ஜமால் முஹம்­மது கல்­லூ­ரி­யின் தாளா­ளர், செய­லர் டாக்­டர் காஜா நஜி­மு­தீன், பொரு­ளா­ளர் ஹாஜி ஜமால் முஹம்­மது, கல்­லூரி முதல்­வர் முனை­வர் இஸ்­மா­யில் மொகி­தீன் ஆகி­யோர் வழங்­கிய இரங்­கல் செய்­தி­கள் இந்­நி­கழ்­வில் வாசிக்­கப்­பட்­டன.

டாக்­டர் ஹிமானா சையத்தின் புதல்­வர் திரு அப்­துல் கனி ஏற்­புரை வழங்க, பென்­கூ­லன் பள்­ளி­வா­சல் இமாம் மௌலவி கலீல் அஹ்­மது ஹசனியின் இறைப் பிரார்த்­த­னை­யு­டன் நிகழ்ச்சி நிறை­வுற்­றது. பல்­வேறு சமூ­கத் தலை­வர்­களும் தமிழ் ஆர்­வ­லர்­களும் பேரா­சி­ரி­யர்­களும் பொது­மக்­களும் இதில் கலந்­து­கொண்­ட­னர்.

தமி­ழ­கத்­தின் ராம­நா­த­பு­ரம் மாவட்­டம் சித்­தார்­கோட்­டை­யைச் சேர்ந்த ஹிமானா சையத்தின் இயற்­பெ­யர் சையத் இபு­ரா­ஹிம். மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்­றிய இவர், 1964ல் 'மறு­ம­லர்ச்சி' வார இத­ழில் எழு­தத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து, நூற்­றுக்­க­ணக்­கான சிறு­க­தை­கள், கவி­தை­கள், கட்­டு­ரை­கள் மற்­றும் பல நூல்­களைப் படைத்தார்.

'நர்­கீஸ்' மாத இத­ழின் கௌரவ ஆசி­ரி­ய­ரா­க­வும் பல ஆண்­டு­கள் பணி­யாற்­றி­னார். 'மல்­லாரி பதிப்­ப­கம்' என்ற தமிழ் இலக்­கி­யப் பதிப்­ப­கம் ஒன்­றை­யும் இவர் நடத்­தி­னார்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் பலர் இவ­ரது ஆக்­கங்­களில் எம்.ஃபில் பட்­டம் பெற்­றுள்­ள­னர். இவ­ரது 'ருசி' சிறு­க­தைத்­தொ­குப்பு கேர­ளப் பல்

­க­லைக்­க­ழ­கத்­தில் 1992 முதல் 1996 வரை முது­கலை மாண­வர்­க­ளின் பாடத்­திட்­டத்­தில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தது. மதுரை காம­ரா­சர் பல்­க­லைக்

­க­ழக மாண­வர் செல்வி சண்­மு­க­

வ­னம் இவ­ரது நாவல்­களை ஆராய்ச்சி செய்து பி.எச்டி. டாக்­டர் பட்­டம் பெற்­றுள்­ளார்.

மருத்­து­வம், இலக்­கி­யம், கல்வி, சம­யம், தன்­மு­னைப்பு என்ற பல ஆய்­வ­ரங்­கங்­களில் கட்­டு­ரை­கள் படைத்­த­வர். சிங்­கப்­பூர் தமிழ்­மு­ரசு, வானொலி, தொலைக்­காட்சி நிகழ்­வு­களில் பங்­க­ளிப்புச் செய்­ததோடு 'தமிழ் மாமணி', 'பாரத் ஜோதி', 'சிறந்த குடி­ம­கன்' போன்ற விரு­து­க­ளைப் பெற்­ற­வர் டாக்டர் ஹிமானா சையத்.

டாக்டர் ஹிமானா சையத் - மறைந்த எழுத்தாளரின் மறையாத புகழ்