முழுமையான உடற்பயிற்சிக்கு நீச்சல் கற்றுக்கொள்ளலாம்

முழுமையான உடற்பயிற்சிக்கு நீச்சல் கற்றுக்கொள்ளலாம்

2 mins read
2ee8fc1c-4fe4-4a33-a5e3-98618f1473a4
2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வாரந்­தோ­றும் உடலை அதி­கம் வருத்­திக்­கொள்­ளா­தபடி 150 நிமி­டங்­க­ளுக்­கா­வது உடற்­ப­யிற்­சி­ செய்யவேண்டும் அல்­லது 75 நிமி­டங்­க­ளுக்­குத் தீவிர உடற்­ப­யிற்சி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளவேண்டும் என்று சில சுகா­தார வல்­லு­நர்­கள் ஆலோ­சனை வழங்கு­வ­துண்டு. அந்த வகை­யில் நீச்­சல் ஒரு சிறந்த நட­வ­டிக்கை என்று பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கிறது.

நீந்­தும்­போது முட்டி, கணுக்­கால் போன்ற பகு­தி­கள் பாதிப்­ப­டை­வதற்­கான சாத்­தி­யம் குறைவு. மெது­வோட்­டம் உள்ளிட்ட நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டும்­போது இத்­த­கைய பிரச்­சி­னை­கள் எழலாம்.

நீச்­ச­லில் பல நன்­மை­கள் உள்­ளன. நீச்சல், உடல் முழுவதற்கும் பயிற்சி தருகிறது. உடலை அதிகம் வருத்தாமல் இதயத் துடிப்பை அதிகரிக்கக்கூடியது.

நீச்சல், உடலின் தசைகளை வலுப்படுத்தும். வலியையும் சிரமங்களையும் தாங்கிக்கொள்ளும் உடலின் ஆற்றலை வளர்க்கும்.

தசைகள் வலுவடைவதோடு 'கார்டியோவெஸ்கியுலர்' எனும் உடலுக்கு ரத்தம் அனுப்பப்படும் முறையை வலுப்படுத்தவும் நீச்சல் உதவும். இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கமுடியும்.

காயமடைந்தவர்கள், மூட்டுவாதம் உள்ளவர்கள் போன்றோருக்கு நீச்சல் அபாயம் அதிகம் விளைவிக்காத உடற்பயிற்சி என்றும் கூறப்படுகிறது. சில வேளைகளில் உடலில் தசை, எலும்பு சம்பந்தப்பட்ட காயம் ஏதேனும் இருந்தால் வலியைக் குறைக்க நீச்சல் உதவலாம்.

ஆஸ்­து­மா எனும் மூச்­சுப் பிரச்­சினை நோய் இருப்­ப­வர்­க­ளுக்கு நீச்­சல் நல்­ல­தோர் உடற்­ப­யிற்சி. நீந்­தும்­போது நீருக்­குள்­ளே­யும் வெளி­யே­யும் சரி­வர மூச்சுவிட­வேண்­டும். இது, ஆஸ்­து­மா உள்­ள­வர்­க­ளுக்கு உத­வி­யாக இருக்­கும்.

மேலும், நுரை­யீ­ரல் கொள்­ள­ளவை மேம்­ப­டுத்­த­வும் நீச்­சல் உகந்­தது.

நீச்­சல் இரவில் அமைதியான தூக்­கத்­திற்­குக் கைகொ­டுப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பொது­வா­கவே அடிக்­கடி உடற்­பயிற்சி செய்­வது இர­வில் அமை­தி­யான தூக்­கத்­திற்கு வழி­வ­குப்பதாக சில ஆய்­வு­கள் குறிப்­பி­டு­கின்­றன.

நீச்சல் நமது உணர்வுகளுக்கு உயிரூட்டவும் உதவுகிறது. ஓர் ஆய்வில் மறதிநோய் உள்ள சிலர் 12 வாரங்களுக்கு நீச்சல் உட்பட நீர் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அதற்குப் பிறகு அவர்களின் உணர்வுகள் புத்துயிர் பெற்றது அந்த ஆய்வின் முடிவுகளின் மூலம் தெரியவந்தது.

நீச்­சல் மன­வு­ளைச்­ச­லைக் கையா­ள­வும் வகை­செய்­கிறது. தைவா­னில் நடத்­தப்­பட்ட ஓர் ஆய்­வில் 101 பேர் பங்­கேற்­ற­னர். அவர்­க­ளின் 44 பேர் துரி­த­மான வாழ்க்­கை­மு­றை­யால் மன­வு­ளைச்­சலுக்கு ஆளா­கியி­ருந்­த­னர். நீச்­ச­லில் ஈடு­பட்ட பிறகு அந்த எண்­ணிக்கை எட்­டுக்­குக் குறைந்­தது.

இத்­த­கைய பல நன்­மை­களை நீச்­சல் வழங்­கு­வ­தா­கப் பல வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர். https://www.healthline.com/ இணை­யத்­தளத்­தில் இடம்­பெற்ற தக­வல்­களைக் கொண்டு இந்த விவ­ரங்­கள் பகி­ரப்­பட்­டுள்­ளன. எதற்­கும் மருத்­து­வர்­க­ளின் ஆலோ­ச­னை­யைக் கேட்­பது நல்­லது.