'கர்ப்ப கால மனஅழுத்தம் குழந்தையைப் பாதிக்கக்கூடும்'

'கர்ப்ப கால மனஅழுத்தம் குழந்தையைப் பாதிக்கக்கூடும்'

2 mins read

கர்ப்­ப­ கா­லத்­தில் மன­அ­ழுத்­தம், கோபம், பயம், பதற்­றம், குழப்­பம் போன்ற உணர்­வு­கள் பெண்­க­ளுக்கு ஏற்­படும். தகுந்த ஆலோ­ச­னை­கள் பெறு­வ­தன் மூலம் அவற்­றில் இருந்து வெளி­வர முடி­யும்.

கர்ப்­ப ­கா­லம் பெண்­க­ளின் வாழ்­வில் மகிழ்ச்­சி­யான, உற்­சா­க­மான தரு­ண­மா­கும். அதே­ச­ம­யத்­தில் ஹார்­மோன்­களில் ஏற்­படும் மாற்­றங்­கள், தங்­க­ளைச் சுற்றி நடக்­கும் நிகழ்­வு­க­ளால், கர்ப்­ப­ கா­லத்­தில் மன­அ­ழுத்­தம், கோபம், பயம், பதற்­றம், குழப்­பம் போன்ற உணர்­வு­கள் பெண்­க­ளுக்கு ஏற்­ப­டு­வது உண்டு.

தமி­ழ­கத்­தின் வேலூ­ரைச் சேர்ந்­த­வர் அனிதா பாரதி. ரசா­யன பொறி­யி­யல் துறை­யில் பட்­டப்­படிப்பை முடித்து இருக்­கி­றார். பத்து ஆண்டு காலம் நிறு­வ­னம் ஒன்­றில் பணி­பு­ரிந்த அவ­ரது வாழ்க்கை, முதல் குழந்­தையை கரு­வில் சுமந்­த­போது மாறி­யது. கர்ப்­ப­ கா­லத்­தில் குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்­து­கொள்­வ­தற்­காக தனது தேட­லைத் தொடங்­கி­னார். அதைத் தொடர்ந்து அவர் அறிந்து­கொண்ட பல விஷ­யங்­கள் அவரை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தின.

அவற்றை தம்­மைப் போன்ற மற்ற பெண்­க­ளுக்­கும் தெரி­யப்­ப­டுத்­து­வதற்­காக குழந்தை பிறப்பு பயிற்சி­யா­ள­ருக்­கான படிப்பை அனிதா முடித்­தார். 2018ஆம் ஆண்டு மையம் ஒன்றை அவர் தொடங்­கி­னார். அதன் மூலம் கர்ப்­பி­ணி­க­ளுக்­கும் புதி­தாக குழந்தை பெற்ற தாய்­மார்­களுக்­கும் குழந்தை பிறப்பு மற்­றும் குழந்தை வளர்ப்­பைப் பற்றி கற்­பிக்­க­வும் ஊக்­கம் கொடுக்­க­வும் ஆரம்­பித்­தார்.

இது­வரை அவ­ரது வழி­காட்­டு­தல் மூலம் பலர் பய­ன­டைந்­துள்­ள­னர். இது­கு­றித்த தனது அனு­ப­வத்தை பகிர்ந்­து­கொள்­கி­றார் அனிதா பாரதி.

"இயற்­கை­யான முறை­யில் தாய்மை அடை­வது பற்றி பெண்­களுக்கு விரி­வான விளக்­கங்­களை நான் வழங்­கு­கி­றேன். பெண்­கள் இயற்­கை­யான முறை­யில் மகப்­பேறு பெற வேண்­டும் என்­ப­தே என்­னு­டைய நோக்­கம். கர்ப்­ப­ கா­லம் மற்­றும் பிர­ச­வம் தொடர்­பான பிரச்­சி­னை­க­ளுக்கு பதற்­றம் அடை­யா­மல் தீர்­வு­காண்­பது பற்றி அறி­வு­றுத்­து­கி­றேன். தாய்­மை­ய­டைந்த பெண்­கள் மூன்­றா­வது மாதம் முதல் எட்­டா­வது மாதம் வரை எவ்­வாறு செயல்­பட வேண்­டும்? கர்ப்ப காலத்­தில் என்­னென்ன உண­வு­க­ளைச் சாப்­பிட வேண்­டும்? கருவை சுமக்­கும் காலத்­தில் மன­நி­லையை எவ்­வாறு வைத்­துக்­கொள்ள வேண்­டும்? கர்ப்­பி­ணி­யின் செயல்­க­ளால் கரு­வில் இருக்­கும் குழந்தை பெறும் நன்மை, தீமை­கள் என்ன? கர்ப்ப காலத்­தில் செய்ய வேண்­டிய ஆச­னங்­கள் மற்­றும் பயிற்­சி­கள் எவை? பிர­ச­வம் எளி­தாக நடை­பெற என்ன செய்ய வேண்­டும்? என்­பது பற்­றி­யும் கற்­றுக்­கொ­டுக்­கி­றேன்.

"குழந்தை வளர்ப்பு என்­பது அற்­பு­த­மான கலை. அதை நாம் எப்­படி கையாள வேண்­டும்? அதா­வது எப்­படி தாய்ப்­பால் கொடுக்க வேண்­டும், தாய்ப்­பால் போது­மான அளவு சுரக்க என்ன செய்ய வேண்­டும்? குழந்­தை­க­ளுக்குத் தேவை­யான சத்­தான உணவு முறை­கள், கற்­பித்­தல் முறை­கள், குழந்­தை­க­ளின் எண்­ண­வோட்­டம் பற்றி அறி­ய­வும் பெற்­றோ­ருக்கு கற்­றுக்­கொ­டுக்­கி­றேன். குழந்தை பிறந்­தது முதல் 10 வயது ஆகும் வரை, நல்ல முறை­யில் வளர்க்க என்­னென்ன செய்ய வேண்­டும்?" என ஆலோ­சனை அளிக்­கி­றேன், என்றார் அனிதா.