தமிழ்மொழி விழா 2022ஐ முன்னிட்டு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுச் சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 1ஆம் தேதி, பிற்பகல் இரண்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை இந்நிகழ்ச்சி மெய்ந்நிகர் முறையில் இடம்பெறும்.
இதில் 'படைப்பிலக்கியமும் மொழிபெயர்ப்பும்' என்ற தலைப்பில் புகழ்பெற்ற பேச்சாளரான பேராசிரியர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.
'ஸூம்' செயலிவழி இடம்பெறும் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம்.
கலந்துகொள்வதற்கான விவரங்கள்:
சந்திப்பு எண்: 884 8600 0943
கடவு எண்: STTU
'தமிழை நேசிப்போம் தமிழில் பேசுவோம்' எனும் தாரக மந்திரத்துடன் வளர்தமிழ் இயக்கம் முன்னின்று நடத்தும் வருடாந்தர நிகழ்வான தமிழ்மொழி விழா, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மே முதல் தேதி வரை நடைபெறவிருக்கிறது. சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் அமைப்புகளும் இதில் பங்குகொள்ள இருக்கின்றன.