கோடையின் குளிர்ச்சிக்கு வெற்றிலை பானம்

கோடையின் குளிர்ச்சிக்கு வெற்றிலை பானம்

1 mins read

வெற்­றிலை! பச்சை இத­யம் போன்ற வடி­வத்­தில் இருக்­கும் வெற்­றிலை (படம்) சம­யச் சடங்­கு­களில் பல நூற்­றாண்­டு­க­ளாக முக்­கி­யத்­து­வம் பெற்­று­வந்­துள்­ளது. உண­வுக்­குப் பின் செரி­மான சக்­தி­யைத் தூண்­டும் என்­ப­தற்­காக இதை பாக்கு, சுண்­ணாம்­பு­டன் மெல்­லும் பழக்­க­மும் பல­கா­ல­மாக இருந்­து­வ­ரு­கிறது. இருப்­பி­னும் இதன் மருத்­துவ குணங்­களை கருத்­தில்­கொண்டு கோடைக் காலத்­துக்கு ஏற்ற பான­மா­கச் செய்து பரு­கி­னால் மிகுந்த பலன் கிடைக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

தேவை­யான பொருள்­கள்:

வெற்­றிலை - 4

குல்­கந்து - 4 தேக்­க­ரண்டி

சோம்பு - 1 தேக்­க­ரண்டி

தேங்­காய் - 1 தேக்­க­ரண்டி

கல்­கண்டு - 1 மேசைக்­க­ரண்டி

1/4 கப் தண்­ணீர்

செய்­முறை:

வெற்­றிலை உள்­ளிட்ட அனைத்து பொருள்­க­ளை­யும் 'மிக்ஸி'யில் இட்டு முத­லில் தண்­ணீர் சேர்க்­கா­மல் அரைத்­துக்­கொள்­ள­வும். பின்­னர் நீரைச் சேர்த்து விழு­தா­கும் வரை அரைத்து வடி­கட்­டிப் பரு­க­லாம்.

வெற்­றி­லை­யு­டன் சேர்க்­கப்­பட்­டுள்ள இதர பொருள்­கள் குளிர்ச்சி தரக்­கூ­டி­யவை. வெற்றிலை செரிமானத்துக்கும் உதவும். நோயெதிர்ப்பு சக்தியும் கொண்டது. உடலுக்கு மிகவும் உகந்தது.