நேற்று மிஞ்சிய உணவு இன்று நஞ்சு

நேற்று மிஞ்சிய உணவு இன்று நஞ்சு

2 mins read

அமெ­ரிக்­கா­வில் நடந்த ஒரு விசித்­தி­ர­மான சம்­ப­வத்­தில் நச்­சு­ணவு உண்ட 19 வயது இளை­யர் ஒரு­வர் தன் அனைத்து கைவி­ரல்­க­ளு­டன் இரு கால்­க­ளை­யும் இழக்க நேரிட்­டது. உண­வ­கத்­தில் சாப்­பிட்ட பிறகு, மிச்­சப்­பட்ட கோழி­யை­யும் நூடல்­சை­யும் நண்­பர் ஒரு­வர் தனக்­குக் கொடுத்­ததை அடுத்து அதைச் சாப்­பிட்ட அந்த இளை­யர், 20 மணி­நே­ரத்­திற்­குப் பிறகு வாந்தி, இடுப்பு வலி, காய்ச்­சல், குளிர், மூச்­சுத் திண­றல், கழுத்­தில் விறைப்பு, மங்­கலான கண்­பார்வை போன்ற பாதிப்பு­க­ளுக்கு ஆளா­னார்.

இளை­ய­ரின் உடல் முழு­வ­தும் காயங்­கள் போன்­றி­ருந்த புள்­ளி­கள், உட­லுக்­குள் ரத்­தக் கசிவை ஏற்­படுத்­திய ரத்த உறை­வுக்­கான அறி­கு­றி­கள் என்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இந்த ரத்த உறை­வு­கள், கைக­ளுக்­கும் கால்­க­ளுக்­கும் செல்­லும் பிரா­ண­வா­யு­வைத் தடுத்­தன. இத­னால், நோயா­ளி­யின் கைவி­ரல்­களும் கால்­களும் துண்­டிக்­கப்­பட்­டன.

அவ­ரின் நிலைக்கு நச்­சு­ண­வு­தான் கார­ணம் என்று ஒரு சாரா­ரும் மூளைக்­காய்ச்­ச­லுக்கு எதி­ரான தடுப்­பூ­சியை அவர் முழு­மை­யா­கப் போட்­டுக்­கொள்­ள­வில்லை என்று மற்­றொரு சாரா­ரும் கூறு­கின்­ற­னர்.

எனி­னும், மிச்­சப்­படும் உண­வால் உபா­தை­கள் ஏற்­ப­ட­லாம் என்­கின்­றனர் நிபு­ணர்­கள். பாதி ரொட்­டித் துண்டு, பாதி­ய­ளவு சூப் போன்­ற­வற்­றில் வேறொ­ரு­வ­ரின் வாய் மற்­றும் எச்­சில் பட்­டி­ருக்­கும். இந்­நி­லை­யில் அவை மாசு­ப­டுத்­தப்­பட்­டவை.

உணவு அதி­க­மாக இருப்­ப­தா­கத் தோன்­றி­னால், கரண்­டி­யைக் கொண்டு தேவை­யான உணவை எடுத்­துக்­கொண்டு மிச்­சத்­தைப் பிறகு சாப்­பி­ட­லாம். பால், பாலாடைக்­கட்டி, பாலேடு போன்­ற­வற்­றைக் கொண்ட உண­வு­வ­கை­க­ளி­லும் அதி­கச் சத்­துள்ள குழம்­பி­லும் பாக்­டீ­ரியா வள­ரும் சாத்­தி­யம் அதி­கம் என்­ப­தால் அவற்­றைத் தவிர்க்­க­வும் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

செய்தி: நியூயார்க் போஸ்ட்