ஒரு குழந்தை கோபமாக நடந்து கொள்ளும்பொழுது ஒரு பெற்றோர் நீண்ட நேரம் பொறுமை காப்பது கடினமே. எனினும், அதுதான் ஒரே வழி. குழந்தைகள் கோபத்துடன் இருக்கும்போது அவர்களிடம் இருந்து விலகி இருப்பதைவிடவும் அவர்களின் அருகில் இருந்து கோபத்தை நீக்குவது நல்ல தீர்வாக அமையும்.
பெற்றோர் பின்பற்றவேண்டிய ஒருசில குறிப்புகள்:
கோபமான குழந்தையைச் சமாளிப்பதற்கான ஒரே வழி பொறுமையாக இருப்பதுதான். இந்தச் சூழலை நாம் நிதானமாகக் கையாள வேண்டும். இச்சூழ லில் ஆவேசப்படுவதும் அவசரமாகச் செயல்படுவதும் விஷயங்களை மேலும் சிக்கலாக்கும்.
சிறுவயதிலிருந்தே உங்கள் குழந்தைக்கு கருணையைப் பற்றி கற்பித்து, கருணை மனப்பாங்கு உள்ளவர்களாக வளர்க்கவும். இந்த அணுகுமுறை அவர்களைப் பொறுமையுடனும் மற்றவர்களைப் புரிந்து செயல்படவும் உதவும்.
ஒரு பெற்றோராக உங்கள் குழந்தைகள் சொல்வதை நீங்கள் அதிகம் காது கொடுத்து கேட்கவேண்டும். அதேபோல் அவர்கள் மனதில் உள்ளதை பேசவும் அனுமதிக்கவும்.
கோபத்திற்கு பல காரணங்களும் தூண்டுதல்களும் உள்ளன. உங்கள் பிள்ளை கோபமாக இருந்தால், அவரது கோபத்தை தூண்டும் விஷயங்களைக் கண்டுபிடித்து தீர்வு காண முயற்சி செய்வது முக்கியம்.
உங்கள் பிள்ளை தனது கோபத்தை சரியான முறையில் கையாள வேண்டுமென நீங்கள் விரும்பினால், அவர்கள் சொல்வதற்கு எதிராக நடந்து கொள்ளாமல் அவர்களுக்கு உகந்த பதிலளிப்பதில் அதிக கவனம் செலுத்துங்கள்.
உங்கள் குழந்தையின் பிடிவாதத்திற்கு ஒருபோதும் அடிபணியாதீர்கள். அப்படி விட்டுக் கொடுத்துப் போனால், உங்கள் குழந்ைதகள் எதிர்காலத்திலும் சாமான்களைத் தூக்கி வீசுவது, முரட்டுத்தனமாக கத்துவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
உங்கள் பிள்ளை பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க, பெற்றோர்கள் முதலில் ஒரு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் மற்றவர்களிடம் அரவணைப்பையும் மரியாதையையும் காட்டினால் மட்டுமே, உங்கள் குழந்தையும் அவ்வாறே செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆழ்ந்து மூச்சை இழுத்துவிடுவது, கோபமாக இருக்கும்போது ஒரு குவளை தண்ணீர் குடிப்பது, பாடலைப் பாடுவது அல்லது நடனமாடுவது போன்ற மனதை தளர்வாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதுபோன்ற அமைதிப்படுத்தும் உத்திகளைக் குழந்தைகளுக்கும் பெற்றோர் கற்பிக்க வேண்டும்.
தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

