சமய நல்லிணக்கம் வளர இந்து, கிறிஸ்துவ, இஸ்லாம் முறை திருமணம்

சமய நல்லிணக்கம் வளர இந்து, கிறிஸ்துவ, இஸ்லாம் முறை திருமணம்

2 mins read
1214939e-6a69-4238-9699-ced5abd8350e
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய முறைப்படி ஆடை, அலங்காரத்துடன் மணமேடையில் புருஷோத்தமனுக்கும் புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மவுலானா திருமணத்தை நடத்தி வைத்து ஆசிர்வதித்தார். அதன்பிறகு, கிறிஸ்துவ முறைப்படி ஆடை, அலங்காரங்கள் மாற்றப்பட்டு கிறிஸ்துவ போதகர் தலைமையில் மோதிரம் மாற்றி, திருமணம் நடந்தது. நேற்று காலை அதே மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. படங்கள்: ஊடகம் -
multi-img1 of 3

திருமணங்கள் வானத்தில் பறந்தபடி, கடல் நீருக்கடியில் என அவ்வப்போது வித்தியாசமான முறையில் நடந்து வருகின்றன. இப்போது, இந்து, கிறிஸ்துவ, இஸ்­லாம் திரு­மண முறை­க­ளைப் பின்­பற்றி ஒரு தம்­ப­தி­யர் புது­மை­யான முறை­யில் திரு­ம­ணம் செய்து கொண்­டுள்­ள­னர்.

இஸ்­லாம் முறைப்­படி நிக்­கா­வும் கிறிஸ்துவ முறைப்­படி பரி­சுத்த விவா­க­மும் இந்து பாரம்பரிய முறைப்படி மாங்­கல்­யமும் கட்டி ஒரு ஜோடியின் திரு­ம­ண­ம் நடந்து உள்ளது.

அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்தத் திரு­ம­ணம் தமிழ்­நாட்­டில் உள்ள மயி­லா­டு­து­றை மாவட்டத்தில் நடந்­துள்­ளது.

கிராம நிர்­வாக அலு­வ­ல­ரா­கப் பணி­யாற்றி வரும் புரு­ஷோத்­த­மன் என்ற இளை­ஞ­ருக்கும் புவ­னேஷ்­வரி என்ற பெண்­ணுக்­கும் திரு­மண நிச்சயதார்த்தம் நடந்தது.

மத நல்­லி­ணக்­கத்தை வெளிப்­படுத்­தும் வகையில் தனது திரு­ம­ணத்தை வித்­தி­யாசமான முறை­யி­ல் நடத்த விரும்புவதாகப் பெற் றோரிடம் கூறி அனுமதி பெற்ற புரு­ஷோத்­த­மன், மூன்று மதங்­களின் முறைப்­படி­யும் பத்திரிகைகள் அடித்து அனைவருக்கும் வழங்கி­யுள்­ளார்.

இதையடுத்து, இம்மாதம் 26ஆம் தேதி இஸ்­லாம், கிறிஸ்துவ முறைப்­படி­யும் 27ஆம் தேதி இந்து முறைப்­படி­யும் திரு­ம­ணம் செய்துகொண்­ட­னர்.

இந்த திரு­ம­ணம் குறித்து மாப்­பிள்ளை புரு­ஷோத்­த­மன் கூறும்­போது, "எனக்கு முஸ்­லிம், கிறிஸ் துவ நண்­பர்­கள் அதி­கம். சமய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வும் தமி­ழ­கத்­தில் அனைத்து சமயத்தைச் சேர்ந்ேதாரும் ஒற்­று­மை­யு­டன் இருப்­பதை வெளிப்­படுத்­தவும் இப்­படி ஒரு திரு­ம­ணத்தை நடத்­தி­னேன்," என்று பெருைமயுடன் கூறுகிறார்.

சின்ன வய­தி­லி­ருந்தே இஸ்­லா­மி­யர், கிறிஸ்­து­வர் என அனைத்து சமூக மக்­க­ளு­டன் புரு­ஷோத்­த­மன் நட்புடன் பழகி வந்­துள்­ளார். எல்லா மத­மும் சம்­ம­தம் என்ற ரீதி­யி­லேயே இவ­ரு­டைய கொள்­கை­யும் வாழ்க்­கை­யும் இருந்­துள்­ளது.

இந்தியாவில் முதன்முதலாக எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சி, தமிழகத்தில் எந்த சமயத்திலும் சமயம் சார்ந்த மோதல்கள் வராமல் இருக்க இதுபோன்ற திருமணங்கள் மேன்மேலும் அரணாக இருக்கும் என்று திருமணத்துக்கு வந்த அனைவரும் வரவேற்று பாராட்டி உள்ளனர்.