எட்டு வீரர்களை வென்ற செயற்கை நுண்ணறிவு முறை

எட்டு வீரர்களை வென்ற செயற்கை நுண்ணறிவு முறை

1 mins read

'பிரிட்ஜ்' எனும் விளை­யாட்­டில் செயற்கை நுண்­ண­றிவு முறை ஒன்று எட்டு உலக விருது வெற்றி­யா­ளர்­களை வீழ்த்­தி­யுள்­ளது. இந்த விளை­யாட்­டில் இது­வரை செயற்கை நுண்­ண­றிவு முறை­களால் அதி­கம் சோபிக்­க­மு­டி­யாமல் இருந்­தது.

இந்த சாதனை, செயற்கை நுண்­ண­றி­வின் வளர்ச்­சியை எடுத்­துக் காட்­டு­கிறது. 'பிரிட்ஜ்' விளை­யாட்­டில் வெல்ல மனி­தர்­க­ளிடம் மட்­டுமே அமைந்துள்ளதா­கக் கருதப்­படும் முடி­வெ­டுக்­கும் திறன் இருப்­பது அவ­சி­யம் என்­பது இதற்­குக் கார­ணம்.

இதற்­கு­முன் சது­ரங்­கம், 'கோ' போன்ற விளை­யாட்­டு­களில் செயற்கை நுண்­ண­றிவு முறை­கள் மனி­தர்­களை வென்­றி­ருக்­கின்­றன. ஆனால் அவற்­றை­விட 'பிரிட்ஜ்' விளை­யாட்­டில் வெல்­வது சவா­லா­னது என்று சொல்­லப்­ப­டு­கிறது.

'நூக்' என்ற பெய­ரைக் கொண்ட செயற்கை நுண்­ண­றிவு முறையில் பங்­கேற்ற இந்­தப் போட்டி இரண்டு நாள்­க­ளுக்கு பிரான்ஸ் தலை­ந­கர் பாரி­ஸில் நடை­பெற்­றது. பிரான்­ஸின் புதி­தா­கத் தொடங்­கப்­பட்ட 'நூக்­ஏஐ' எனும் நிறு­வ­னம் இந்த முறையை ஐந்து ஆண்டு­க­ளாக உரு­வாக்கி வந்­துள்­ளது.

1996ஆம் ஆண்டு 'ஐபிஎம்' நிறுவனத்தின் 'டீப் புளூ செஸ்' செயற்கை நுண்ணறிவு முறை சதுரங்க வீரர் கேரி கெஸ்பரொவை வென்றது. அதுவே செயற்கை நுண்ணறிவுக்கு விளையாட்டு உலகில் கிடைத்த முதல் வெற்றி.