மிகவும் குறைந்த விலையில் சொகுசு பங்களாக்கள்

மிகவும் குறைந்த விலையில் சொகுசு பங்களாக்கள்

2 mins read
14c35c8d-a841-452e-8e81-df8d6b137987
இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள பிரபல 'தனா லோட்' சுற்றுலாத்தலம். இப்படம் 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சுற்றுப்பயணத் துறை மீண்டுவருவதைத் தொடர்ந்து பாலி உள்ளிட்ட இடங்களில் சலுகை விலையில் சுற்றுப்பயணச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோப்புப் படம்: சஹாரி சரிமான் -

வரும் வெள்­ளிக்­கி­ழமை முதல் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள அனைத்து பய­­ணி­களுக்­கும் சிங்­கப்­பூர் தனது எல்­லை­க­ளைத் திறக்­க­வுள்­ளது. இதைத் தொடர்ந்து பல சிங்கப்­பூரர்­கள் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்ள ஆவ­லா­கக் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

சுற்­றுப்­ப­ய­ணத் துறை மீண்­டும் சூடு­பி­டிப்­ப­தைத் தொடர்ந்து இந்­தோ­னீ­சி­யா­வின் பாலி தீவு உள்­ளிட்ட பகு­தி­களில் சலுகை விலை­யில் சொகுசு பங்­க­ளாக்­களில் தங்கலாம். சில இடங்­களில் இப்­படிப்­பட்ட சொகுசு தங்­கு­மி­டங்­கள் பாதி விலைக்­கும் கிடைக்­கின்­றன.

உதா­ர­ண­மாக, தாய்­லாந்து தலை­ந­கர் பேங்­காக்­கில் உள்ள 'வால்­டோர்ஃப் எஸ்­டோ­ரியா' எனும் ஐந்து நட்­சத்­திர ஹோட்­ட­லில் தங்க ஒரு நாளைக்கு 305 வெள்ளி செல­வா­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது, கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முந்­தைய காலத்­தில் செலுத்­த­வேண்­டிய கட்­ட­ணத்­தில் கிட்­டத்­தட்ட பாதி.

பாலி­யி­லும் சலுகை விலை­யில் சில இடங்­களில் தங்­கும் வச­தி­கள் இருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இங்­குள்ள சில சொகுசு பங்­களாக்­களில் தங்க ஒரு நாளைக்­குக் கட்­ட­ணம் கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முந்­தைய காலத்­தில் இருந்­த­தில் கால் பங்கு எனச் சொல்லப்­ப­டு­கிறது.

2020ஆம் ஆண்டு கொள்­ளை­நோய்ப் பர­வல் தலை­தூக்­கி­ய­போது சுற்­றுப்­ப­ய­ணத் துறை எதிர்­நோக்­கிய சவால்­க­ளைச் சமா­ளிக்க சுற்றுப்பயணச் சேவைகளுக்கு முதலில் பதிவுசெய்து பின்னர் கட்டணம் செலுத்த வகைசெய்யும் திட்டங்கள் அறிமுகமாயின. ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு இத்தகைய சில திட்டங்கள் இன்­ன­மும் நடப்­பில் உள்­ளன.

தென்­கி­ழக்­கா­சி­யா­வுக்கு அப்­பால் பய­ணம் மேற்­கொள்ள விரும்­பு­வோர் இயற்கை அழகு கொஞ்சும் ஜப்­பா­னுக்­குச் செல்ல ஆசைப்­பட வாய்ப்­புள்­ளது. அனால், தற்­போ­தைய நில­வ­ரப்­படி ஜப்­பா­னின் எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­வில்லை. எனி­னும், வரும் மாதங்­களில் இந்நிலையும் மாறிவிடும் என்று சுற்றுப்பயணத் துறை கவனிப்­பா­ளர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.