திருக்குறள் பட்டிமன்றம்; தினகரனுக்கு விருது

2 mins read
20f2b165-f09c-4b13-80d5-6288cbed3a8c
(மேல் படம்) தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் முதல் துணைத் தலைவி திருவாட்டி புஷ்பலதா நாயுடு, செயலவை உறுப்பினர் முனைவர் சீதா லட்சுமி, முன்­னாள் நாடா­ளு­மன்ற நிய­மன உறுப்­பி­னர் இரா. தினக­ரன், கழகத்தின் தலைவர் மு. ஹரிகிருஷ்ணன், 2ஆம் துணைத் தலைவி பத்மினி செல்லையா. படங்கள்: தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் -
multi-img1 of 2

ஆ. விஷ்ணு வர்­தினி

திருக்­கு­றள் சொல்­லும் அறம் குறித்து விவா­தித்­தது இவ்­வாண்­டின் திருக்­கு­றள் விழா. பேரு­ரை­யாக இல்­லா­மல், இம்­முறை வாதி­டும் பட்­டி­மன்­ற­மாக குறள் விழா அமைந்­தது. பிர­பல பேச்­சா­ளர் சுகி சிவம் பட்­டி­மன்ற நடு­வ­ராக அமர்ந்து பேசி­னார்.

"திருக்­கு­றள் அதி­கம் வலி­யுறுத்துவது தனி­ம­னித ஒழுக்­கமா, சமு­தாய அறங்­களா" என்ற தலைப்­பில் எட்­டுப் பேர் விவா­தித்­த­னர்.

தனி­ம­னித ஒழுக்­கத்­தையே திருக்­கு­றள் வலி­யு­றுத்­து­கிறது என்று வாதிட்­ட­வர்­கள் இல்­லற வியல் அதி­கா­ரத்தை மேற்­கோள் காட்­டி­னர்.

குடும்­பங்­கள் இணைந்து சமூ­க­மா­கிறது. சமூ­கத்­தின் அடிப்­படை குடும்­பம். எனவே சமு­தாய அறத்­தையே திருக்­கு­றள் பேசு­கிறது என்று எதிர்­த்த­ரப்­பி­னர் வாதிட்­ட­னர்.

தனி­ம­னி­தர்­கள் சமு­தா­யத்தை உரு­வாக்­கு­வ­தால், திருக்­கு­றள் ஒட்டு­மொத்த சமு­தா­யத்­துக்­கா­கவே எழு­தப்­பட்­டுள்­ளது என்று தீர்ப்பு வழங்­கி­னார் திரு சுகி சிவம்.

மேலும், பேச்­ச­ரங்­கம், குறும் படக் காட்­சி­கள், பரி­ச­ளிப்பு என்று களை கட்­டி­யது தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத்­தின் 35வது திருக்­கு­றள் விழா.

சனிக்­கி­ழ­மை­யன்று இணை­யத் தில் மெய்­நி­க­ர் வழியாக நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் முன்­னாள் நாடா­ளு­மன்ற நிய­மன உறுப்­பி­னர் இரா. தின­க­ரனுக்கு இவ்­வாண்­டின் திரு­வள்­ளு­வர் விருது வழங்­கி சிறப்பிக்கப்பட்டது.

"மிகச்சிறு வய­தி­லேயே திருக்­கு­றளை மன­னம் செய்ய சொல்லி எனது தந்தை என்னை வளர்த்­தார். அதன் கார­ண­மாக, இன்­றும் பல குறட்­பாக்­கள் என் மன­தில் பதிந்­தி­ருக்­கின்­றன. வாழ்க்­கை­யில் திருக்­கு­றள் எனக்கு வழி­காட்­டி­யாக இருக்­கிறது," என்­றார் இந்து அறக்­கட்­டளை வாரி­யத் துணைத் தலை வருமான இரா. தின­க­ரன்.

தமி­ழுக்­கா­க­வும் தமி­ழ­ருக்­கா­க­வும் செய­லாற்­று­ப­வர்­க­ளுக்­காக 2014ஆம் ஆண்­டில் இருந்து திரு­வள்­ளு­வர் விருது வழங்­கப்­பட்டு வரு­கிறது.

விழா­வின் சிறப்பு விருந்­தி­ன­ ரா­கப் பங்­கேற்று உரை­யாற்­றிய செம்­ப­வாங் குழுத்­தொ­கு­தி நாடாளு ­மன்ற உறுப்­பி­னரான விக்­ரம் நாயர்," திருக்­கு­றள் கூறும் அறிவு­ரை­களும் நற்­பண்­பு­களும் சிறந்த எதிர்­கா­லத்­துக்­கும் வெற்­றிக்­கும் நல்­ல­தொரு பாதையை அமைக்­கும்," என்­றார்.

தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கம், திருக்­கு­றள் விழாவை ஒட்டி மழ­லை­யர் முதல் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­ வரை பங்கேற்கும் பல போட்­டி­களை நடத்தி வரு­வதை திரு விக்­ரம் சுட்டிக்காட்டினார்.

மாண­வர் போட்­டி­கள், தமிழ்ச் சான்­றோர் குறித்த காணொ­ளி­கள் உரு­வாக்­கம் முத­லிய முயற்­சி­களை தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கம் இவ்­வாண்டு ஒருங்­கி­ணைத்து வரு­வ­தாக கழ­கத்­தின் தலை­வர் திரு மு. ஹரி­கி­ருஷ்­ணன் தலைமை உரை­யில் குறிப்­பிட்­டார்.

ஆக அதி­க­மான குடும்­பங்­கள் இணை­யம் வழி பங்­கேற்ற சிங்­கப்­பூர் சாதனை நிகழ்வை இவ்­வாண்டு தொடக்­கத்­தில் கழ­கம் நடத்­தி­யது.

இதில் தொடர்ச்­சி­யாக 133 குடும்பங்­கள் திருக்­கு­றள் கூறின.