மாணவர்களின் எதிர்காலத்திற்காக ஓடியே நிதி திரட்டும் 'தாறுமாறு ரன்னர்ஸ்'

1 mins read
31bc4536-fa61-4791-a5d7-4dc6c8ef57f6
செல்­வ­காந்­தன் முத்­து­ரா­மன், 44. -

ஏறக்­கு­றைய இரு­பது ஆண்­டு­களுக்­கு­முன் தமது பட்­டப் படிப்­பிற்­காக நிதி­யு­தவி பெற்ற திரு செல்­வ­காந்­தன் முத்­து­ரா­மன், 44, இப்­போது திடல்­தட விளை­யாட்­டில் தம்­மைப்­போல உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்காக நிதி திரட்­டு­கி­றார்.

'மணிக்கு ஒரு மைல்' என்ற கணக்­கில் 26 மணி நேரத்­தில் 42 கிலோ­மீட்­டர் தொலைவு ஓடி, சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­ட­ளைக்காக (எஸ்­ஐ­இடி) நிதி திரட்­டும் 'தாறு­மாறு ரன்­னர்ஸ்' ஓட்­டக் குழு­வி­ன­ரில் திரு செல்­வா­வும் ஒரு­வர். 2017ல் தொடங்­கப்­பட்ட இக்­குழு, ஆண்­டு­தோ­றும் வசதி குறைந்த மாண­வர்­க­ளுக்காக நிதி திரட்­டும் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­கிறது. வரும் 30ஆம் தேதி நள்­ளி­ரவு நிறை­வ­டை­யும் ஓட்­டத்­தின் மூல­ம் குறைந்­தது $30,000 திரட்டு­வது கு­ழு­வின் நோக்­கம்.

அப்போது தம் தந்­தை­யால் தம்மை முழு­மை­யாக ஆத­ரிக்க இய­லாத நிலை­யில், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தம்­மால் நிம்­ம­தி­யா­க­வும் முழுக் கவ­னத்­து­ட­னும் படிக்க முடிந்­த­தற்கு சிங்­கப்­பூர் இந்­தி­யர் கல்வி அறக்­கட்­ட­ளை­யின் உதவியே கார­ணம் என்றும் இப்­போது அதற்­குக் கைம்­மாறு செய்ய முடிவது நெகிழ்ச்சி தருகிறது என்றும் திரு செல்வா கூறினார்.

'தாறு­மாறு ரன்­னர்ஸ்' குழு­வின் நிதித்­தி­ரட்­டுக்­குப் பங்­க­ளிப்­ப­து­டன் குழு­வில் சேர்ந்து ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­மு­றை­யைக் கொண்­டா­டும்­படி அதன் நிறு­வ­ன­ரான வழக்­கறி­ஞர் ரமேஷ் செல்­வ­ராஜ், 43, கேட்­டுக்­கொண்டார். "இது எல்­லோ­ரை­யும் அர­வ­ணைக்­கும் குழு. ஓட்­டத்­தில் ஈடு­பட ஆசைப்­படும் அனைவரையும் குடும்பமாக வர­வேற்­கி­றோம்," என்­றார் அவர்.

செய்தி: கி. ஜனார்த்தனன்