சிங்கப்பூர் இலக்கியத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள்

சிங்கப்பூர் இலக்கியத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள்

2 mins read

சிங்­கப்­பூர் இலக்­கி­யத்­தைக் கொண்­டா­டும் மூன்று தமிழ் நிகழ்ச்­சி­கள் வரும் 16ஆம் தேதி சனிக்­கி­ழமை 'தி ஆர்ட்ஸ் ஹவு­சில்' நடை­பெ­ற­வுள்­ளன. உள்­ளூர் இலக்­கிய வாசிப்பை ஊக்­கு­விக்­கும் 'சிங்­கப்­பூர் இலக்­கி­யம் - நமது இலக்­கி­யத்தை வாசிப்­போம்' இயக்­கத்­தின் ஓர் அங்­க­மாக இந்நிகழ்ச்­சி­களை சிங்­கப்­பூர் புத்­தக மன்­றம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

♦ இளந்­த­மிழ் வாசிப்­பும் இன்­பத்­ த­மிழ் விளை­யாட்­டும் - உள்­ளூர்த் தமிழ்ப் புத்­த­கங்­கள் சில­வற்றை அரங்­கில் வாசித்து உரை­யா­டும் இளம் மாண­வர்­க­ளுக்­கான நிகழ்ச்சி. வாசிப்­பின்­வழி விரி­யும் உல­கம், தமிழ் மொழி­யின் சுவை, உள்­ளூர் எழுத்­தா­ளர்­கள் பற்­றிய அறி­தல், சிங்­கப்­பூ­ர் தமிழ்ப் படைப்­பு­கள் சார்ந்த அறி­மு­கம், தமிழ்ச் சொற்­க­ளு­டன் மாண­வர்­க­ளுக்­கான விளை­யாட்டு.

நேரம்: பிற்­ப­கல் மணி 2.15 - 3.45

♦ தங்­க­மு­னைத் தரு­ணங்­கள் - தங்­க­முனை விருது 2021 வெற்­றி­யா­ளர்­கள் சில­ரு­டன் அவர்­க­ளது வெற்­றிப் படைப்­பின் பகிர்­த­லும் அத­னைப் பற்­றிய அரங்­கக் கலந்­து­ரை­யா­ட­லும். கவிதை, சிறு­கதை எனத் தங்­கள் படைப்­பின் பாதை­யில் தங்­க­முனை அங்­கீ­கா­ரம் மேலும் அவர்­களை நகர்த்­திச் செல்­லும் அடுத்­த­கட்ட உற்­சா­கம். தம் படைப்­பிற்­கான ஆரம்ப உந்­து­தல் மற்­றும் வாசிப்­பின் மறுக்க முடி­யாப் பயன். படைப்­பின் கருப்­பொ­ருள்­க­ளைத் தாங்­கள் கண்­ட­டை­யும் கணம், பிறகு எழுத்­தாய் உரு­மா­றும் பொறுப்பு. அவ­சர உல­கில் இலக்­கிய மகிழ்வு. முதல் எழுத்­தின் நினை­வோடை என அரங்­கக் கலந்­து­ரை­யா­டல்.

நேரம்: மாலை மணி 4.00 - 5.30

பங்­கேற்­போர்: ஹேமலதா, ஜெய்­கு­மார் பிரியா, ச. மோக­னப்­ரியா, சர்­வான் (கூத்­தப்­பெ­ரு­மாள் சர­வ­ணப்­பெரு­மாள்), தமிழ்ச்­செல்வி இரா­ஜ­ராஜன், சு. வெங்­கட்­ர­மணி.

♦ லதா­வின் படைப்­பு­ல­கம் - சிங்­கப்­பூர் எழுத்­தா­ள­ரும் கவி­ஞரு­மான லதா­வு­டன், அவ­ரது படைப்­பு­க­ளைப் பற்­றிய கலந்­து­ரை­யா­டல். படைப்­பா­ள­ரின், எழுத்­தின் நோக்­கம். அனைத்­து­ல­கத் தமிழ்த் தளத்­தில், தமிழ்ப் புனை­வு­ல­கில் சிங்­கப்­பூ­ரின் தரம், இடம். எழுத்­தின் வெற்­றி­க­ர­மான ஒழுங்­கிற்கு தேவை­யான மெனக்­கெ­டல். மெய்­யும் கற்­ப­னை­யும் அனைத்­து­ல­கப் பிரச்­சி­னை­களு­டன் படைப்­பில் எதி­ரொ­ளிக்­கும் எதார்த்­தம். எழுத்­தும் எழுத்­தா­ள­ரும் வாசிப்­பால் அடை­யும் உச்­சி­தம். எழுத்­தின்­வழி தான் அடை­யும் சுதந்­தி­ரம் எனப் பல்­வேறு செய்­தி­களை உணர்­வாய், அனு­ப­வக் கோவை­யாய், தன் படைப்­பின்­வழி மனம் திறக்­கி­றார் லதா.

நேரம்: மாலை மணி 6 - இரவு மணி 7.30

இம்­மூன்று நிகழ்ச்­சி­க­ளை­யும் வழி­ந­டத்­து­கி­றார் சிங்­கப்­பூர் எழுத்­தா­ள­ரும் கவி­ஞ­ரு­மான நெப்­போ­லி­யன். புல்­லாங்­கு­ழல் இசை­யும் கான­மும் - நெ.ரெமிலா.

இம்­மூன்று நிகழ்ச்­சி­க­ளுக்­கும் அனு­மதி இல­வ­சம்.