மாரடைப்பு, பக்கவாத அபாயத்தை முன்கூட்டியே கணித்துக்கூறும் புதுவகை இரத்தப் பரிசோதனை முறை

மாரடைப்பு, பக்கவாத அபாயத்தை முன்கூட்டியே கணித்துக்கூறும் புதுவகை இரத்தப் பரிசோதனை முறை

2 mins read
e18ff9c6-f944-4aca-961c-f7789347c3dc
-

அடுத்த நான்கு ஆண்­டு­க­ளுக்­குள் ஒரு­வ­ருக்கு இத­யச் செய­லி­ழப்பு, பக்­க­வா­தம் ஏற்­பட அல்­லது இத­யச் செய­லி­ழப்­பால் உயி­ர் இ­ழக்க மிகுந்த அபா­யம் இருக்­கி­றதா என்­ப­தைக் கணிக்­க­வல்ல புது­வகை இரத்­தப் பரி­சோ­தனை முறையை ஆய்­வா­ளர்­கள் உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

அந்­தப் புது­வ­கைப் பரி­சோ­த­னை­யின் மூலம் புர­தங்­க­ளை­யும் 'மெஷின் லேனிங்' தொழில்­நுட்­பத்­தை­யும் பயன்­ப­டுத்தி, 27 புரத மாதிரி பெறப்­படும். அதன்­மூ­லம் அடுத்த நான்கு ஆண்­டு­களில் இத­யம் தொடர்­பான நோய்­கள் ஏற்­பட வாய்ப்­புள்­ளதா என்­ப­தைக் கணிக்க முடி­யும் எனக் கூறப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்­கா­வின் கொல­ரா­டோவை மைய­மா­கக் கொண்ட 'சோமா­லா­ஜிக்' நிறு­வ­னத்­தின் ஆய்­வா­ளர்­கள் குழு இந்­தப் புது­வகை இரத்­தப் பரி­சோ­தனை முறையை உரு­வாக்கி­ இருக்­கிறது.

இந்­தப் பரி­சோ­தனை இரத்­தத்­தில் உள்ள புர­தங்­களை அள­வி­டு­வ­தைச் சார்ந்­துள்­ளது. நடப்­பி­லுள்ள பரி­சோ­தனை முறை­க­ளைக் காட்­டி­லும் புது முறை கிட்­டத்­தட்ட இரு­மடங்கு துல்­லி­ய­மான முடி­வு­க­ளைக் காட்டு­கிறது.

'சயின்ஸ் டிரான்ஸ்­லே­ஷ­னல் மெடி­சின்' எனும் மருத்­துவ சஞ்­சி­கை­யில் இந்த ஆய்வு அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

மொத்­தம் 22,849 பேரி­டம் இருந்து பெறப்­பட்ட இரத்த பிளாஸ்மா மாதி­ரி­களில் உள்ள 5,000 புர­தங்­களை 'மெஷின் லேனிங்' தொழில்­நுட்­பத்­தின் துணை­யு­டன் ஆய்­வா­ளர்­கள் ஆராய்ந்­த­னர்.

அவற்­றில் மார­டைப்பு, பக்­க­வா­தம், இதயச் செய­லி­ழப்பு ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­படு­வதற்­கான வாய்ப்­பி­ருப்­ப­தைக் கணிக்­க­வல்ல 27 புர­தங்­களை அவர்­கள் அடை­யா­ளம் கண்­ட­னர்.

பின்­னர் இந்­தப் புது­வகை இரத்­தப் பரி­சோ­தனை முறை 11,000 பேரி­டம் சோதித்­துப் பார்க்­கப்­பட்­டது. ஏற்­கெ­னவே மார­டைப்பு அல்­லது பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளி­டத்­தி­லும் இம்­மு­றை­யால் திரும்­ப­வும் அவற்­றால் பாதிக்­கப்­படும் அபா­ய­முள்­ளதா என மதிப்­பிட இய­லும் என்­றும் கூறப்­பட்­டது.

முன்கூட்டியே நோய் அபாயத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால் சிறந்த சிகிச்சை உத்தியைக் கண்டறிந்து, சிகிச்சை வழங்க இம்முறை வழிவகுக்கும்.

இப்போது அமெரிக்காவில் நான்கு சுகாதாரப் பராமரிப்பு மையங்களில் இந்தப் புதிய இரத்தப் பரிசோதனை முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இங்கிலாந்தும் இம்முறையை ஏற்றுக்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

"ஒரு­வ­ருக்கு மேம்­பட்ட சிகிச்சை தேவைப்­ப­டுமா, அப்­படி ஒரு­வ­ருக்­குச் சிகிச்சை அளித்­த­பின், அது உண்­மை­யி­லேயே வேலை செய்­கி­றதா எனும் கேள்வி­களுக்கு எல்­லாம் விடை­ய­ளிக்க இய­லும் எனக் கரு­து­கி­றேன்," என்­றார் ஆய்­வுக்­குழு­வின் தலை­வர் டாக்­டர் ஸ்டீ­ஃபன் வில்­லி­யம்ஸ்.

இத­யப் பிரச்­சினை ஏற்­பட யாருக்கு அதிக அபா­ய­முள்­ளது, யாருக்­குக் குறைந்த அபா­ய­முள்­ளது என வகைப்­ப­டுத்த முடி­யும் என்­ப­து­டன், அடுத்த நான்கு ஆண்­டு­களில் இதய நோயால் பாதிக்­கப்­பட எத்­தனை விழுக்­காடு வாய்ப்­புள்­ளது என்­ப­தை­யும் இந்தப் புது­வகை இரத்­தப் பரி­சோ­தனை முறை காட்­டி­வி­டும். இந்­தப் புதிய முறை இதய மருத்­து­வத்­தில் திருப்­பு­மு­னை­யாக அமை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.