தமிழ்மொழி விழா 2022ஐ ஒட்டி முற்றிலும் மாணவப் பேச்சாளர்கள் பங்குகொள்ளும் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் நேரடியாக நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் 16ஆம் தேதி சனிக் கிழமை மாலை 5 மணிக்கு சுவா சூ காங் எம்ஆர்டி நிலையத்துக்கு எதிரே அமைந்திருக்கும் கியட்ஹோங் சமூகமன்றத்தின் பன்னோக்கு மண்டபத்தில் (தளம் 5) நடைபெறவிருக்கிறது.
தமிழ்மொழிக் கற்றலில் வாழ்வாதாரம் உள்ளது என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் 'இருக்கிறது' என்ற அணியில் கோபிகா, மகிஷா, ரோகித் குமார் ஆகியோரும், 'இல்லை' என்ற அணியில் விஷ்ணுவர்தினி, கவின் நிலா, இனியா ஆகியோரும் வாதிடுகிறார்கள். திரு முகம்மது அலி நடுமையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
செய்தி: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

