தமிழ் மொழி விழாவையொட்டி இவ்வாண்டும் முத்தமிழ் விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் செய்துள்ளது.
வரும் 23ஆம் தேதி சனிக் கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
ஏ.கே.டி. கிரியேஷன்சின் கிராமிய நடனம், மாணவர்களின் மாறுவேடப் போட்டி, கதை சொல்லும் திறன், பேச்சுத் திறன், உள்ளூர் எழுத்தாளருக்குத் தமிழவேள் விருது, போட்டிகளின் வெற்றியாளர் அறிவிப்பு, உள்நாட்டு இளையர்களின் சிறப்புச் சிற்றுரைகள் ஆகிய அனைத்தும் உள்ளடக்கிய முத்தமிழ் விழா அத்தனையும் கற்கண்டு என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் தெரிவித்துள்ளது.
விழாவில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை கலந்துகொள்கிறார்.
இணையப் பாதுகாப்புப் பொறியாளரான அருள் ஓஸ்வின் 'தமிழும் இளையரும்' என்ற தலைப்பிலும் தமிழ் இலக்கிய மன்றத் தலைவி செல்வி மிருதுளா குமார் 'தமிழும் தொழில்நுட்பமும்' என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றுகின்றனர். சூம் அடையாள எண்: 826 5010 8119, கடவுச் சொல் : astw
யூடியூப் நேரலை:
https://www.youtube.com/c/
singaporetamilwriters

