'மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்' எனும் தலைப்பில் சிங்கப்பூர் மாதவி இலக்கிய மன்றத்தின் 42வது தமிழர் திருநாள் மற்றும் 100வது இலக்கியச்சோலை வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு பாலஸ்டியர் சாலையில் உள்ள சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கில் நடைபெறுகிறது.
கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம், உரையரங்கம், சிறப்புரை, மாணவ-மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், முனைவர் இரத்தின வெங்கடேசனின் நூல் ஆய்வு, கவிஞர் தியாக.இரமேஷ்ஷின் "தனிமைத் தவம் " எனும் கவிதை நூல் வெளியீடு என சிந்தைக்கும் செவிக்கும் விருந்தளிக்கும் பல்சுவை அங்கங்கள் நடைபெற உள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹோ கா லியோங், 'ஜே ஜி எண்டர்பிரைசஸ்' நிர்வாக இயக்குநர் டாக்டர் தினகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். ரவீந்திரன் ஆகியோர் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.

