எச்சரிக்கும் நோய் அறிகுறிகள்

எச்சரிக்கும் நோய் அறிகுறிகள்

2 mins read
87f4f2a9-f21e-4bea-827d-552b8f612147
தாள முடியாமல் தலைவலி வந்தால் வலி மாத்திரைகளைப் போட்டு வலியைப் போக்கிவிடாமல் அதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.படம்: ஐஸ்டாக் -

நமது உடல் வேண்டாத நோய், உடல்நலப் பிரச்சினைகள் அண்ட வந்தால் சில பாதிப்புகளை ஏற் படுத்தி எச்சரிக்கிறது. அந்தப் பாதிப்பு எதற்காக ஏற்பட்டது என் பதைத் தெரிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான் நோய் அல்லது பிரச்சினை முற்றுவதற்கு முன்பே குணப்படுத்தவோ அல்லது கட்டுப் படுத்தவோ முடியும். சில நாட்பட்ட நோய்கள் தாக்குவதற்கு முன்னால் அறிகுறிகளை உணர்த்தி நம்மை விழிப்புடன் இருக்கச் செய்கிறது. அறிகுறிகளை உணர்ந்து உடனடி யாகப் பரிசோதனை செய்து சிகிச் சைகளை மேற்கொண்டால் அந்தப் பாதிப்புகளைத் தவிர்த்துவிடலாம்.

நீண்ட தூரம் உட்கார்ந்து கால்களை தொங்க போட்டபடி பயணம் மேற்கொள்ளும்போது காலில் வீக்கம் ஏற்படுவது. இதனை பயணத்தின் பாதிப்பால் ஏற்பட்டது என்று அலட்சியப்படுத்திவிட வேண் டாம். ஒருவேளை இதயத்தில் அல்லது சிறுநீரகத்தின் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கலாம். மருத்துவரைச் சந்தித்து தகுந்த பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.

காலை­யில் தூங்கி எழுந்­த­தும் சில­ரு­டைய முகம் வீங்­கிய நிலை­யில் காணப்­படும். ஒரு சில நாட்­கள் அவ்­வாறு காணப்­பட்­டால் பிரச்­சினை இல்லை. அடிக்­கடி அவ்­வாறு வீங்கிக் காணப்­பட்­டால், சிறு­நீ­ரக நோய்ப் பாதிப்பை உணர்த்­தும் அறி­கு­றி­யாக அதனை எடுத்­துக்­கொள்­ள­லாம்.

அள­வுக்கு அதி­க­மான சோர்வு ஏற்­பட்­டால் அதைக் கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளுங்­கள். ரத்த சோகையோ, தைராய்டு பாதிப்­பின் வெளிப்­பா­டாக அது இருக்­கக் கூடும்.

உண­வுக்­கட்­டுப்­பாடு, உடற் பயிற்சி போன்­றவை மேற்­கொள்­ளா­மல் திடீ­ரென்று உடல் எடை குறைந்­தால் மருத்­து­வ­ரைச் சந்­தித்து ஆலோ­சனை பெறு­வது நல்­லது. இனிப்பு நோய், புற்­று­நோய், காச­நோய் போன்ற பாதிப்­பு­கள் உடல் எடையை இழக்­கச் செய்­யலாம்.

தின­மும் காலை­யில் படுக்­கை­யில் இருந்து எழும்­போது தலை­வலி ஏற்­பட்­டால் மருத்­து­வ­ரைச் சந்­தித்து ரத்த அழுத்­தத்தை பரி­சோ­திக்க வேண்­டும்.

உடல் எடை குறை­வது, அதிக தாகம், இர­வில் அடிக்­கடி சிறு­நீர் கழித்­தல், உட­லில் ஏற்­படும் புண்­ஆறா­மல் இருத்­தல் போன்­றவை ஏற்­பட்­டால் அவை இனிப்பு நோயின் அறி­கு­றி­யாக இருக்­க­லாம்.

அடிக்­கடி ஜீர­ண­கோ­ளாறு, வாந்தி, வயிற்­றுப்­போக்கு மற்­றும் சிறு­நீர் மஞ்­சள் நிற­மாக தோன்­று­தல் போன்­றவை இருந்­தால் அவை ஈரல் வீக்­கத்­தின் அறி­கு­றி­யாக இருக்­க­லாம்.

கால் பாதம் வெடித்­துக் காணப்­ ப­டு­தல், இள­நரை போன்­றவை ஏற்­பட்­டால் உட­லில் பித்­தம் அதிகரித்­தி­ருப்­பதை உணர்ந்து கொள்­ள­லாம். கால் பெரு­வி­ரல் அல்­லது கை பெரு­வி­ரல் முனைப் பகுதி சுருங்கி, வீக்­கத்­து­டன் அவ்­வப்­போது வலித்­துக் கொண் டிருந்­தால் அது 'கவுட்' என்ற நோயின் அறி­கு­றி­யாக இருக்­க­லாம்.

உடல் மெலி­தல், முகம் சுருங்கிப் ­போ­கு­தல் போன்­றவை இருந்­தால் அது காச­நோ­யாக இருக்­க­லாம். இரு­மலே இல்­லா­மல்­கூட காச­நோய் ஏற்­ப­டு­வ­துண்டு.

தொப்­பு­ளின் முன்­பா­கம் ஆப் ­பி­ளின் முன்­ப­குதி போன்று வீக்­கத்­து­டன் காணப்­பட்­டால், அது­வும் இனிப்பு நோயின் அறி­கு­றி­யாக இருக்­க­லாம்.

கர்ப்­ப­கா­லத்­தில் ஒரு­சில பெண் களுக்கு திடீ­ரென்று ஈறு­வீக்­கம் காணப்­படும்.

அவர்­கள் உட­ன­டி­யாக மருத்து வரின் ஆலோ­ச­னையை பெற வேண்­டும்.

அந்தப் பெண்­க­ளுக்கு உயர் ரத்த அழுத்­தம் இருக்க வாய்ப்பு உள்­ளது. அவர்­க­ளுக்கு குறைப்­பி­ர­ச­வத்­தில் குழந்தை பிறக்­கும் சூழ­லும் ஏற்­ப­ட­லாம்.