'தமிழ் கற்பதால் முன்னேற எவ்வித தடையும் இல்லை'

'தமிழ் கற்பதால் முன்னேற எவ்வித தடையும் இல்லை'

2 mins read
f0875e5d-a1a3-45b5-8986-09322017775b
முத்துச்சிதறல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த வருகையாளர்கள். படம்: உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சங்கம் -

ஹர்­ஷிதா பாலாஜி

தமிழைப் படிப்­ப­தால் என்ன பயன் இருக்­கின்­றது என்ற கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும் வகை­யில் உம­றுப்­பு­ல­வர் தமிழ் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் பயின்ற முன்­னாள் மாண­வர்­கள் சங்­கம் சென்ற வெள்­ளிக்­கி­ழ­மை­அன்று 'முத்­துச்­சி­த­றல்' நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

'தமி­ழோடு உயர்­வோம்' என்ற கருப்­பொ­ரு­ளில் நிகழ்ச்சி அமைந்த தாகத் தெரி­வித்­தார் சங்­கத்­தின் தலை­வர் திரு. தி. ஜோதி­நா­தன்.

உம­றுப்­பு­ல­வர் தமிழ் உயர்­நி­லைப்­பள்ளி இயங்­கிய காலத்­தில் அங்கு படித்த நால்­வர் தங்­கள் அனு­ப­வங்­களை­யும் அவர்­கள் கற்­றுக்­கொண்ட பாடங்­க­ளை­யும் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

திரு. கோ. செல்­வ­ராஜூ, அர­சாங்­கத்­து­றை­யில் 50 ஆண்­டு­கள் பணி­யாற்றி துணைத்­தூ­தர் பத­வி­ வரை உயர்ந்­ததை பற்­றி­யும் தூத­ராக இருந்­த­போது தமிழ் மொழி தனக்கு உத­வியது பற்­றி­யும் பகிர்ந்துகொண்­டார்.

திரு­மதி மீனாட்சி சபா­பதி தன் வாழ்­நா­ளில் எந்த அள­விற்கு தமிழ் மொழி உத­வி­யி­ருக்­கிறது என்­றும் தான் வானொ­லி­யில் படைத்த நிகழ்ச்­சி­கள் மூல­மாக உல­க­ள­வில் பாராட்டுகளைப் பெற்றதாகவும் அவை­யோ­ரிடம் பகிர்ந்­து­கொண்­டார்.

திரு. சி. குண­சே­க­ரன், தான் ஈடு­பட்டு வந்த மற்­றும் தற்­போது நடத்­தும் தொழி­லுக்­குத் தமிழ் முதன்மையாக விளங்குவது குறித்துப் பேசி­னார்.

தமி­ழில் பல மின்­னி­லக்கப் படைப்­பு­களை உரு­வாக்கி, பொரு­ளீட்டி வரு­வதை பற்­றி­யும் அவர் விளக்­கிக் கூறி­னார்.

திரு. கா.முரு­கை­யன், அர­சாங்­கம், தனி­யார் துறை எனப் பல அமைப்­பு­களில் பல ஆண்­டு­கள் பணி­யாற்­றிய பிறகு தற்­போது சொந்த நிறு­வ­னம் அமைத்து செயல்­ப­டு­வ­தா­க­வும் தான் கற்ற தமிழ்­மொழி தனக்கு அடித்­த­ளம் அமைத்­துக் கொடுத்­த­தென்றும் தெரி­வித்­தார்.

ஆகை­யால், அனை­வ­ரும் தாங்­கள் தங்­கள் வாழ்க்­கை­யில் முன்­னே­றி­ய­தற்கு தமிழ் மொழிக் கல்வி எந்­த­வ­கை­யி­லும் இடை­யூ­றாக அமை­ய­வில்லை என்­றும் மாறாக அது அடிப்­ப­டையை வகுத்­துக் கொடுத்­துள்ளது என்­றும் உறு­தி­யுடன் கூ­றி­னார்­கள்.

மோண்­டி­சோரி நிறு­வ­னத்­தின் தலை­வ­ரும், தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக்­கு­ழு­வின் துணைத்­தலை­வ­ரும் சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக சபை­யின் தலை­வ­ரு­மான டாக்­டர் சந்­துரு நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்­டார்.

தமது உரை­யில் டாக்­டர் சந்­துரு உம­றுப்­பு­ல­வர் தமிழ் உயர்­நி­லைப்­பள்­ளி­யில் கல்வி கற்ற முன்­னாள் மாண­வர்­கள் பல­ து­றை­களில் மேம்­பட்ட நிலை­யில் இருப்­பதை எடுத்­துக்­கூ­றி­னார்.

அத்­து­டன், அவர்­களி­டம் இயற்­கை­யாக அமைந்­துள்ள தமிழ் மொழிப் பற்­றும் ஆர்­வ­மும் தமிழ் மொழி­யினை சிங்­கை­யில் என்­றுமே வாழும் மொழி­யாக வைத்­தி­ருக்­க­வேண்­டும் என்ற அக்­கறை மேலோங்கி இருப்­ப­தைக் காட்டுவதா ­க­வும் டாக்­டர் சந்­துரு தெரி­வித்­தார்.

நான்கு முன்­னாள் மாண­வர்­களின் உரை­க­ளுக்குப் பிறகு, முன்­னாள் மாண­வர்­கள் சிலர் பற்­றிய குறிப்­பு­கள் இடம்­பெ­றும் முத்­துச்­சி­த­றல் நினைவு மலர் வெளி­யி­டப்­பட்­டது. சிறப்பு விருந்­தி­னர் டாக்­டர் சந்­துரு நூலை வெளி­யிட்­டார்.

முதல் நூலை சங்­கத்­தின் முன்­னாள் தலை­வ­ரும் தற்­போ­தைய ஆலோ­ச­க­ரு­மான திரு. பொன் சுந்­த­ர­ராசு பெற்­றுக்கொண்­டார்.