காலையில் ராஜாபோல் உணவு

காலையில் ராஜாபோல் உணவு

3 mins read

காலை­யில் ராஜா­வைப் போல­வும் மதிய உணவை ஒரு அமைச்­ச­ரைப் போல­வும் இரவு உணவை ஒன்­றும் இல்­லாத ஏழை­யைப் போல­வும் சாப்­பிட வேண்­டும் என்­னும் பொன்­மொ­ழிக்­குள் ஆரோக்­கி­யம் குறித்த அத்­தனை விவ­ரங்­க­ளை­யும் அடக்­கி­விட்­ட­னர் நம் முன்­னோர்­கள்.-

காலை­யில் எல்­லாச் சத்­து­களும் நிரம்­பிய தானி­யங்­கள், பழங்­கள், காய்­க­றி­கள் கலந்த உண­வைச் சாப்­பி­ட­வேண்­டும். மதிய வேளை­யில் நிறைய காய்­க­றி­கள், குறைந்த அள­வில் சோறு, இர­வில் எளி­தில் செரி­மா­ன­மா­கக் கூடிய எளி­தான உணவை மிகக் குறை­வான அள­வில் சாப்­பிட வேண்­டும் என்­பதே இதன் பொருள்.

இதற்­கு­மா­றாக காலை­யில் எது­வும் சாப்­பி­டா­மல், ஒரு நாளை ஆரம்­பிக்­கி­றோம்.

காலை­யில் சாப்­பி­டும் உண­வு­தான் நாள் முழு­வ­தும் ஒரு­வரை சுறு­சு­றுப்­பா­க­வும் புத்­து­ணர்ச்­சி­யு­ட­னும் செயல்­பட வைக்­கிறது. அத்­து­டன், மூளை, தசை­, எலும்பு, செரி­மான மண்­ட­லத்துக்­குத் தேவை­யான சக்­தி­யை­யும் அளிக்­கிறது என்­ப­தால், காலை உண­வைத் தவிர்க்­கக்­கூ­டாது என்­பதே ஊட்­டச்­சத்து நிபு­ணர்­க­ளின் கருத்­தாக உள்­ளது.

ஆனால், நேர­மின்­மை­யால் பல­ரும் காலை உண­வைத் தவிர்த்து விடு­கின்­ற­னர். பெரும்­பா­லா­னோர் ஒரு குவளை தேநீர், காபி­யோடு காலை உணவை முடித்­துக்­கொள் கிறார்­கள். இந்த அணு­கு­முறை நல்ல உடல் ஆரோக்­கி­யத்­துக்கு உலை வைத்­து­வி­டும் என்­கின்­ற­னர் மருத்­து­வர்­கள்.

இரவு உணவு உண்­ட­பி­றகு எட்டு மணி நேரங்களுக்கு மேலாக உண­வின்றி நீண்ட இடை­வெளி விடப்­படு­வதால், உட­லுக்­குத் தேவை­யான சக்­தி­யைப் பெற காலை­யில் சத்­தான உண­வைச் சாப்­பி­டு­வது அவ­சி­யம்.

தவ­றான கற்­பனை

உண­வைத் தவிர்த்­தால் உடல் எடை­யைக் குறைக்­க­லாம் என்று நினைப்­பது பெரும் தவறு. இது ஒரு தவ­றான கற்­பனை.

காலை உணவை தவிர்க்­கும் போது உட­லில் பசிக்­கான ஹார்­மோன் அதி­க­மா­கத் தூண்­டப்படு­கிறது. இத­னால் மதிய உணவை அதி­க­ள­வில் எடுத்­துக்­கொள்ள நேரி­டும். இது உடல் எடையை மேலும் அதி­க­ரிக்­கவே செய்­யும்.

இரவில் பணிபுரி­ப­வர்­களும் வீட்­டுக்கு வந்­த­தும் தூங்கி விடு­வதை வழக்­க­மாக்­கிக் கொண்­டி­ருப்­பார்­கள். ஆனால், இவர்­களும் காலை உணவு எடுத்­துக் கொள்­வ­தைத் தவிர்க்­கக் கூடாது.

ஆய்­வு­கள் எச்­ச­ரிக்கை

அண்­மைய ஆய்­வ­றிக்­கை­யின் படி, காலை உண­வைத் தவிர்க்­கும் பழக்­க­மா­னது டிமென்­ஷியா என்ற மறதி நோயை உரு­வாக்­கும் அபா­யத்தை நான்கு மடங்கு அதி­க­ரிக்­கும் என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இந்த ஆய்­வின் முடி­வு­கள் ஜப்­பா­னிய இத­ழில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

முழுதானிய உணவு, விதைகள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சிகாேகாவின் ரஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

காலை உணவை தவிர்ப்­ப­தன் விளை­வாக ரத்­தத்­தில் சர்க்­கரை அதி­க­ரித்து, நீரி­ழிவு நோய் வர 20% அதிக வாய்ப்புள்ள­தா­க­வும் மற்­றொரு தக­வல் சுட்­டிக்காட்டி யுள்­ளது.

சாப்­பி­டு­வ­தும் தவிர்ப்­பதும்

காலை உண­வில் சில­வற்றை சேர்த்­துக்­கொள்­வ­தும் தவிர்ப்­ப­தும் உடல் நலத்­திற்கு நல்­லது.

காலை உண­வில் பழச்சாறு அருந்­து­வது பல­ருக்­கும் எளி­தாக உள்­ளது. இத­னைத் தவிர்த்து பழங்­களை வெட்டி சில துண்­டு­கள் காலை உண­வில் எடுத்­துக்­கொள்­வது நார்ச்­சத்து, வைட்­ட­மின்­கள், தாது உப்­பு­கள் கிடைக்­கச்­செய்­யும். காய்­க­றிச் சாறும் பரு­க­லாம்.

ஓட்ஸ் உட­னடி சக்­தி­யும் நீண்ட நேர சக்­தி­யும் கொடுக்­கக்­கூ­டி­யது. நார்ச்­சத்து கொண்­டது. அத­னால் வயிறு நிறைந்த உணர்வு இருக்­கும். செரி­மா­னம் சீராய் இருக்­கும்.

முட்டை சிறந்த புர­தம், நல்ல கொழுப்புச் சத்து கொண்­டது. காலை உண­விற்­குச் சிறந்­தது.

தர்­பூ­சணி, பப்­பா­ளிப் பழங்­களும் நன்மை அளிக்­கும்.

காலை­யில் தேநீர், காபி தவிர்ப்­பது நல்­லது. இதனைக் காலை உண­விற்­குப் பிறகு எடுத்­துக்­கொள்­ள­லாம். ஆறு பாதாம் பருப்­பு­களைக் காலை உண­விற்கோ அல்­லது 11 மணி உண­விற்கோ எடுத்­துக்­கொள்­வது சிறந்த புர­தச் சத்தை அளிக்­கும். அதி­கம் சர்க்­கரை கலந்த உணவு, கேக் போன்ற வற்றை தவிர்த்துவிட வேண்­டும் என அறிவுறுத்தி உள்ளனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூஸ் 18 ஊடகங்கள்