'சமூகத்துக்குப் பணியாற்றுவதே சாரணியர்களின் நோக்கம்'

'சமூகத்துக்குப் பணியாற்றுவதே சாரணியர்களின் நோக்கம்'

2 mins read
2ddd2c5f-fdd4-4b66-9e90-e7f1b9010e2c
-

ஆ. விஷ்ணு வர்­தினி

இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு மாணவ சாரணியர்கள் மீண்­டும் நேரடி தொண்­டூ­ழி­யப் பணிக்­குத் திரும்­பி­யுள்­ள­னர். சிங்­கப்­பூர் சாரணியர் அமைப்­பின் 'கேம்ப் கிரிஸ்­டீன்' முகாம் அதற்­கான வாய்ப்­பு­களை அளித்து வரு­கின்­றது.

கொவிட்-19 நோய்ப்­ப­ர­வ­லால் முடங்­கி­யி­ருந்த கேம்ப் கிரிஸ்­டீன் சாரணியர்களின் முகாம்­க­ள் முழுமையாகத் திறப்­ப­தற்கு முன்­னர், புதுப்­பிப்­புப் பணி­களில் இறங்­கி­னர் ஐந்து பள்­ளி­க­ளைச் சேர்ந்த சார­ணியர் படை­கள். அலங்­கார கார் சக்­க­ரங்­க­ளுக்கு வண்­ணம் பூசு­தல், தோட்­ட­வேலை ஆகி­ய­வற்­றில் மூன்று நாட்களாக மும்­மு­ர­மாக ஈடு­பட்­டி­ருந்­த­னர் நூற்­றுக்­கும் மேற்­பட்ட சாரணியர் (படம்).

தொண்­டூ­ழி­யப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த மாணவி ச. ருத்­த­ர­தாரணி, "சமூ­கப் பணி­யில் அதிக மன­நி­றைவு இருக்­கி­றது என்­பதை சாரணியர் படை எனக்கு உணர்த்­தி­யுள்­ளது. தொடர்ந்து சமூ­கத்­துக்­குப் பங்­காற்ற வேண்­டும் என்ற உறு­தியை இது என்­னுள் விதைத்­துள்­ளது," என்­றார். பூச்­சூன் உயர்­நிலைப் பள்­ளி­யில் உயர்­நிலை மூன்­றில் பயி­லும் அவர், மூன்றாண்டு கால­மாக சாரணியர் படை­யில் இயங்கி வரு­கின்­றார்.

ஸ்ரீ நாரா­யண மிஷ­னில் மூத்­தோ­ருக்­காக தொண்­டூ­ழி­யப் பணி செய்­வ­தோடு, பள்ளித் துப்­பு­ர­வாளர்­கள், உண­வுக் கடைக்­காரர்­கள் முத­லி­யோ­ருக்கு நன்றி கூறும் பல முயற்­சி­க­ளை­யும் முன்­னெ­டுத்­துள்­ளனர் ஃபூச்­சூன் உயர்­நிலைப் பள்­ளி­யின் பெண் சார­ணர்­கள்.

விளை­யாட்டு, கலை என பல்­வேறு இணைப்­பாட நட­வ­டிக்­கை­களுக்­கி­டையே, சாரணியர் படை­யைப் பல மாண­வி­கள் தேர்ந்­தெ­டுப்­ப­துண்டு. பள்­ளி­யில் தொடங்­கிய இந்த தொண்­டூ­ழி­யப் பய­ணத்தை தனிப்­பட்ட முறை­யில் விரி­வு­ப­டுத்த எண்ணி, தத்­தம் வட்­டா­ரங்­களில் சமூக அமைப்பு­களி­லும் சமூ­கப் பணி­யாற்றி வரு­வ­தாக மாண­வர்­கள் பகிர்ந்து­கொண்­ட­னர்.

ஃபூச்­சூன் உயர்­நிலைப் பள்­ளி­யில் வேதி­யி­யல், கணினிப் பயன்­பாட்டு ஆசி­ரி­ய­ரா­க­வும், சாரணியர் படையை மேற்­பார்­வை­யி­டு­ப­வ­ரா­க­வும் பணி­யாற்றி வரும் திரு­மதி ஷ.சுகந்தி, தொடக்­கப்­பள்­ளி­யி­லி­ருந்தே சாரணியராக இயங்கி வந்­த­வர். அந்த அனு­ப­வங்­கள் முழு­மை­யா­ன­தொரு மனி­த­ராக தன்னை உரு­மாற்­றி­யுள்­ளதை அவர் நினை­வு­கூர்ந்­தார்.

சமூ­கத்­துக்­காக உழைப்­பதே சாரணியர்களின் நோக்­க­மாக இருந்து வந்­துள்­ளது.

நேரடித் தொடர்­பி­னைத் துண்­டித்த கொவிட்-19 சூழ­லி­லும், உதவி தேவைப்­ப­டு­வோ­ரு­டன் தொடர்­பு­கொண்டு மின்­னி­லக்க முறை­யில் உத­வி­ய­தும், சுய மேம்­பாட்­டுக்­காக மெய்­நி­கர் முகாம்­களில் கலந்­து­கொண்­ட­தும் சாரணியர்களைத் துடிப்­பாக வைத்­தி­ருந்­த­தா­கக் கூறி­னார் திரு­மதி சுகந்தி.

சிங்­கப்­பூர் சாரணியர் அமைப்­பைப் பற்றி மேலும் அறிய: https://girlguides.org.sg/# தளத்தை நாட­லாம்.