ஹர்ஷிதா பாலாஜி
வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு சமூக ஆதரவையும் பயிற்சியையும் வழங்கும் 'ஃபாஸ்ட்' எனப்படும் நிறுவனம் கடந்த 24ஆம் ேததி ஞாயிற்றுக்கிழமையன்று 'இஃப்தார்' எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தியா, இலங்கை, இந்தோ னீசியா, பிலிப்பீன்ஸ், மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணிப்பெண்கள் தங்களது பாரம்பரிய உணவு வகைகளைச் சமைத்து வந்து பகிர்ந்துகொள்ளும் புதிய நடவடிக்கை இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
சிங்கப்பூரின் பல்லின சமுதாயத்தையும் இன, மத நல்லிணக்கத்தையும் போற்றும் வண்ணம் அனைத்து மதங்களையும் சேர்ந்த பணிப்பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
புனித ரமலான் மாதத்தின்போது பணிப்பெண்கள் தங்களது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருப்ப தால் அவர்கள் கவலையின்றி பாதுகாப்பான இடத்தில் நோன்பு திறப்பதற்கு ஏதுவாக 'ஃபாஸ்ட்' நிறுவனம் தங்கள் வளாகத்தை திறந்து வைத்திருக்கின்றது.
'ஃபாஸ்ட்' மனிதவள அமைச்சின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகின்ற அறக்கொடை நிறுவனமாகும்.
வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு, பணி சூழலுக்கும்-வாழ்க்கை முறைக்கும் இடையே ஒரு சமநிலையை மேம்படுத்தும் வாய்ப்புகள், சமூக ஆதரவு, பயிற்சி ஆகியவற்றை 2005ஆம் ஆண்டில் இருந்து இந்நிறுவனம் வழங்கி வருகின்றது.
'ஃபாஸ்ட்' நிறுவனம் இதுவரை ஏறக்குறைய 25,000 வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்தியுள்ளது.