மே 1ல் தமிழ்­மொழி விழா­வின் நிறைவு விழா

மே 1ல் தமிழ்­மொழி விழா­வின் நிறைவு விழா

2 mins read

கவி­மாலை நடத்­தும் தமிழ்­மொழி விழா­வின் நிறைவு விழா வரும் மே மாதம் 1ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்கு டெசன்­சன்ஸ் சாலை­யில் உள்ள சிவில் சர்­விஸ் கிளப் அரங்­கில் நடை­பெற உள்­ளது.

நிகழ்­வின் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக பிர­பல சொத்து முகவை நிறு­வ­ன­மான புரோப்­நெக்ஸ் லிமிட்­டெட் நிறு­வ­னத்­தின் தலை­வ­ரும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான திரு இஸ்­மா­யில் கஃபூர், வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் திரு சு. மனோ­க­ரன் ஆகிய இரு­வ­ரும் கலந்­து­கொள்­வர்.

சிறப்பு அங்­க­மாக ஒலி 96.8ன் திரு.முக­மது ரஃபி வழி­ந­டத்­தும் கவி­ம­ன­மும் இசை­ ம­ண­மும் இசை நிகழ்ச்சி நடை­பெற உள்­ளது.

இதில் சூப்­பர் சிங்­கர் சூர்யா ஆனந்த், அனு­பமா முரளி, முனை­வர் எஸ் பி ஜெய­ராஜ்­தாஸ் பாண்­டி­யன் ஆகி­யோர் கலந்­து­கொண்டு இன்­னிசை நிகழ்ச்­சி­யைப் படைக்க உள்­ள­னர்.

மேலும், கவி­மாலை இளை­ஞர் அணியின் விஷ்­ணு­வர்த்­தினி, சரண்யா முசிலா, ரகு­நந்­தன், சுவேதா, பிர­பவ், ஸ்ரீராம் ஆகி­யோர் இணைந்து படைக்­கும் 'ஆர்க்­கிட் பூங்கா' எனும் கவிதை நாட­க­மும் இடம்­பெற இருக்­கிறது.

அத்­து­டன், இளம் கவி­ஞ­ருக்­கான தங்க முத்­திரை விருது, சிங்­கப்­பூ­ரில் தமி­ழுக்­கும் இலக்­கி­யத்­துக்­கும் பங்­காற்­றிய தமிழ்ச் சான்­றோ­ருக்கு கணை­யாழி விரு தும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

தொடக்­க­நிலை மாண­வர்­க­ளுக்­கான கவிதை சொல்­லும் போட்டி, உயர்­நி­லைப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­கான கவி­தைப் போட்டி, கவிதை மொழி­பெ­யர்ப்­புக்­கான பரி­ச­ளிப்பு போன்ற அங்­கங்­களும் இடம்­பெற இருக்­கிறது.

நேரடி நிகழ்ச்­சிக்கு கீழ்க்­கண்ட இணைப்­பின் வழி முன்­பதிவு செய்துகொள்­ள­வும். http://tinyurl.com.52/htftpm.

தொடர்­புக்கு லலிதா சுந்­தர் 9060 4464