ராம். நாராயணசாமிக்கு தமிழவேள் விருது

ராம். நாராயணசாமிக்கு தமிழவேள் விருது

2 mins read
5d30b5f3-2f8b-41a5-9893-8af5639c963a
பாலர் பள்ளி மாறுவேடப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள். கீழ்ப்படம்: தொடக்கநிலை 1-2 வகுப்புக்கான மாறுவேடப் போட்டியில் வென்றவர்கள். படங்கள்: சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம். -
multi-img1 of 3

மூத்த எழுத்­தா­ள­ரும் நாடக ஆசி­ரி­ய­ரு­மான திரு. ராம். நாரா­ய­ண­ சா­மிக்கு இவ்­வாண்­டு தமி­ழ­வேள் விருது வழங்­கிச் சிறப்­பித்­தி­ருக்­கிறது சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம்.

இம்மாதம் 23ஆம் தேதி இணை­யத்­தில் 'ஸூம்' வழி நடை­பெற்ற முத்­த­மிழ் விழா­விற்கு முன்­ன­தாக 17ஆம் தேதி விருது வழங்­கும் நிகழ்வு நேர­டி­யாக நடை­பெற்­றது.

எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் திரு. நா. ஆண்­டி­யப்­ப­னும் செய­லா­ளர் திரு­வாட்டி கிருத்­தி­கா­வும் உட­னி­ருக்க சிறப்பு விருந்­தி­னரும் புக்­கிட் தீமா தனித்­தொ­குதி நாடாளு­மன்ற உறுப்­பி­னருமான திரு. முரளி பிள்ளை விரு­தினை வழங்­கிச் சிறப்­பித்­தார்.

அத்­து­டன் போட்­டி­களில் வெற்றி­பெற்ற மாண­வர்­க­ளுக்­கும் பொது மக்­க­ளுக்­கும் 17ஆம் தேதி பரி­சளிப்பு நிகழ்வும் நடை­பெற்­றது.

பாலர் பள்ளி, தொடக்­கப் பள்ளி மாண­வர்­க­ளுக்­குத் திரு. முரளி பிள்ளை பரி­சு­களை வழங்­கி­னார்.

வளர் தமிழ் இயக்­கத்­தின் தற்­போ­தைய மதி­யு­ரை­ஞ­ரும் மேனாள் தலை­வ­ரு­மான திரு.ஆர். ராஜா­ராம், உயர்­நிலை, தொடக்கக்கல்­லூரி, பல்­கலைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கும் பொது மக்­க­ளுக்­கும் பரி­சு­களை வழங்­கி­னார்.

பரி­ச­ளிப்பு நிகழ்­வு­கள் அனைத்­தும் காணொ­ளி­க­ளா­கப் பதிவு செய்­யப்­பட்டு 23ஆம் தேதி இணை­யத்­தில் விழா இடம்­பெற்­ற­போது ஒளி­ப­ரப்­பப்­பட்­டன.

கண்­க­வர் நட­னத்­து­டன் தொடங்­கிய நிகழ்ச்­சி­யில், மாறு­வே­டப் போட்­டி­களில் முதல் மூன்று நிலை­களில் வெற்­றி­பெற்­ற­வர்­க­ளின் நடிப்­புத் திறன், தொடக்­கப் பள்ளி மாண­வர்­க­ளுக்­கான கதை சொல்­லும் போட்­டி­யில் முதல் பரிசு பெற்ற மாண­வி­யின் கதை சொல்­லும் திறன், பேச்­சுப் போட்­டி­யில் முதல் பரிசு பெற்ற மாண­வி­யின் பேச்­சுத் திறன் ஆகி­யவை நிகழ்ச்­சிக்கு மேலும் சிறப்­புச் சேர்த்­தன.

கல்வி அமைச்­சின் தமிழ் மொழி கற்­றல், வளர்ச்­சிக் குழு­வின் ஏற்­பாட்­டில் வளர் தமிழ் இயக்­கத்­தின் ஒருங்­கி­ணைப்­பு­டன் ஆண்டுதோறும் நடை­பெ­றும் தமிழ் மொழி விழா­வின் ஒரு பகு­தி­யாக முத்­த­மிழ் விழா நடை­பெற்று வருகிறது.

சிங்­கப்­பூ­ரின் இளம் பேச்­சா­ளர்­கள் இரு­வர் சிறப்­புரை ஆற்­றி­னர். இணை­யப் பாது­காப்­புப் பொறி­யா­ள­ரும் சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ்ப் பேர­வை­யின் மேனாள் தலை­வ­ரு­மான திரு. அருள் ஓஸ்­வின் 'தமி­ழும் இளை­ய­ரும்' எனும் தலைப்­பில் உரை­யாற்­றி­னார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தமிழ் இலக்­கிய மன்­றத் தலைவி செல்வி மிரு­துளா குமார் 'தமி­ழும் தொழில்­நுட்­ப­மும்' எனும் தலைப்­பில் உரை­யாற்­றி­னார். இருவரது உரை­யும் அனைவ­ரா­லும் வர­வேற்­கப்­பட்­டது.