திருக்குறள் கட்டுரைப் போட்டி: இறுதிநாள் மே 31ஆம் தேதி

திருக்குறள் கட்டுரைப் போட்டி: இறுதிநாள் மே 31ஆம் தேதி

2 mins read

தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கம் தமிழ் முரசுடன் இணைந்து திருக்­கு­றளை மைய­மா­கக் கொண்டு பொது­மக்­க­ளுக்­கான கட்­டு­ரைப் போட்­டிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

இப்­போட்டி இரு சுற்­று­களாக நடை­பெ­றும். முதல் சுற்­றில் போட்டி­யா­ளர்­கள் கொடுக்­கப்­படும் தலைப்­பில் கட்­டுரை எழுதி அனுப்ப வேண்­டும்.

தலைப்பு:

'திரு­வள்­ளு­வ­ரும் நானும்'

திரு­வள்­ளு­வர் என்­ற­தும் தங்­க­ளுக்­குத் தோன்­று­வது என்ன? திரு­வள்­ளு­வ­ருக்­கும் தங்­க­ளுக்­குமான தொடர்பு யாது? திரு­வள்­ளு­வர் தங்­க­ளுக்கு எப்­ப­டித் தெரி­கி­றார்? அவர் ஒரு வழி­காட்­டி­யாக, நண்­பராக, புரட்­சி­யா­ள­ராக, பெண்­மை­யைப் போற்­று­ப­வ­ரா­கத் தெரி­கி­றாரா? தங்­கள் குடும்­பத்­தி­ன­ருக்­குத் திரு­வள்­ளு­வர் தேவை­யா­ன­வ­ராக இருக்­கி­றாரா? தங்­கள் வாழ்­வில் திரு­வள்­ளு­வரின் பங்கு என்ன? அவர் தனி­ம­னித ஒழுக்­கத்­தைப் பற்றி, சமு­தா­யத்­தைப் பற்றி பேசு­கி­றாரா? என்­பன குறித்துப் போட்­டி­யா­ளர்­கள் கட்­டுரை எழுத வேண்­டும். கட்­டுரை 900 முதல் 1,000 சொற்­க­ளுக்­குள் இருக்க வேண்­டும்.

கட்­டு­ரை­கள் வந்து சேர வேண்­டிய இறு­தி­நாள்: மே மாதம் 31ஆம் தேதி 2022, இரவு 11.59 மணி.

இப்­போட்­டி­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் உட்­பட அனை­வ­ரும் பங்­கேற்­க­லாம்.

தங்­களது கட்­டு­ரை­யைத் தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத்­தின் இணை­யத்­தள முக­வ­ரி­யான www.tamilmozhi.org மூலம் சமர்ப்­பிக்­க­லாம் அல்­லது புகைப்­ப­டம் எடுத்து 8322 3595 என்ற எண்­ணுக்கு வாட்ஸ்­அப் வழியே அனுப்பி வைக்­க­லாம்.

கட்­டுரை எழுத்­துத் தமி­ழில் எழுதப்படுதல் வரவேற்கப்படுகிறது. உரிய மேற்­கோள் கருத்­து­க­ளு­டன் எழு­தப்­படும்­போது, பயன்­ப­டுத்­தப்­பட்ட புத்­த­கங்­கள் பற்­றிய பட்­டி­யலை­யும் கட்­டு­ரை­யின் இறு­தி­யில் தரு­மாறு போட்­டி­யா­ளர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்றனர்.

புத்­த­கப் பட்­டி­யல் கட்­டு­ரை­யின் சொல் அள­வில் கணக்­கில் கொள்­ளப்­ப­ட மாட்டாது. ஒரு­வர் ஒரு கட்­டு­ரையை மட்­டுமே அனுப்­ப­லாம். நடுவர்க­ளின் முடிவே இறு­தி­யா­னது.

தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத்­தின் செய­லவை உறுப்­பி­னர்­களும் அவர்­தம் குடும்­பத்­தி­ன­ரும் தமிழ்­மு­ரசு நிர்­வா­கத்­தைச் சேர்ந்­த­வர்­களும் ஊழி­யர்­களும் அவர்­தம் குடும்­பத்­தி­ன­ரும் இப்­போட்­டி­யில் பங்­கு­பெற இய­லாது.

எதிர்­கால வெளி­யீட்­டிற்­குக் கட்­டு­ரை­க­ளைப் பயன்­ப­டுத்­து­ம் உரி­மையை ஏற்­பாட்­டா­ளர்­கள் வைத்­தி­ருப்­பார்­கள். முதல் சுற்­றி­லி­ருந்து 50 கட்­டு­ரை­கள் மட்­டும் இரண்­டாம் சுற்­றுக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­படும். அதன் விவ­ரங்­கள் பின்­னர் தெரி­விக்­கப்­படும்.

செய்தி: தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்

சிறந்த கட்­டு­ரை­க­ளுக்கு முதல் பரி­சாக $1,000, இரண்­டாம் பரி­சாக $750, மூன்­றாம் பரி­சாக $500, ஊக்­கப்பரி­சாக 17 பேருக்கு ஆளுக்கு $100 வழங்­கப்­படும்.

போட்டி தொடர்பான கூடு­தல் விவரங்­க­ளுக்கு ஏற்­பாட்­டா­ள­ரை tirukkuralvizha@tamilmozhi.org எனும் மின்­னஞ்­சல் முக­வ­ரி­யில் தொடர்­பு­கொள்­ள­லாம்.