சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், மனிதவள அமைச்சின் 'ஏஸ்' (ACE) எனப்படும் உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழுவுடன் கைகோர்த்து, வெளிநாட்டு ஊழியர்களிடம் விழாக்கால கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்த, அவர்களுக்குப் பெருநாள் பலகாரங்களைக் கடந்த 29ஆம் ேததி வழங்கியது.
'ஏஸ்' நிர்வாகிகளும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் பொறுப்பாளர்களும் கூடியிருந்த இந்த நிகழ்வில், சிங்கப்பூர் கடைய நல்லூர் முஸ்லிம் லீக் தலைவர் ராஜா முஹம்மது, துணைத் தலைவர் மு அ மசூது உள்ளிட்ட பொறுப்பாளர் கள் ஏறத்தாழ 110 வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பலகாரத்துடன் காசோலையையும் வழங்கினர்.
தங்கள் குடும்பங்களை விட்டு விட்டு, இங்கு வந்து பணிபுரியும் அவர்களுக்கு நன்றி கூறவும் விழாக்கால மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் இந்நிகழ்ச்சி உதவியது.
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் பல சமூக அமைப்புகளுடன் இணைந்து, உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது.
இவ்வாண்டு வெளிநாட்டு ஊழியர்களையும் இதில் இணைத்துக்கொண்டது சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்.
கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டாண்டு களாக மிகவும் சிரமப்பட்ட அனை வருக்கும் இது ஓர் ஆறுதலாக அமையும்.
"எங்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது, வெளிநாட்டு ஊழியர்கள் எங்கள் வருகையை வெகுவாக வரவேற்றனர். மேலும், இம்மாதிரியான நடவடிக்கைகளைச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கும் 'ஏஸ்' பிரிவும் இணைந்து நடத்த வழி முறைகளைக் கண்டறிய உள்ளோம்," எனத் தெரிவித்தனர்.