தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்டுக்கோட்டையார் புகழ்பாடிய பதினெட்டாம் ஆண்டு விழா

2 mins read
fb46d9d0-5edc-4267-ac7a-1f250b6e8b52
-

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை தொழி­லா­ளர் தினத்­தில் மக்­கள் கவி­ஞர் மன்­றத்­தின் 18ஆம் ஆண்டு பட்­டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்­த­ரம் கலை இலக்­கிய விழா 'யூடி­யூப்­பில்' நேர­லை­யா­க­வும் மன்­றத்­தின் 'மக்­கள் கவி­ஞர் மன்­றம்' என்ற ஃபேஸ்புக் பக்­கம் வாயி­லா­க­வும் நடை­பெற்­றது (படம்).

மாண­வர் ரோஷன் பரத்­வா­ஜின் தமிழ் வாழ்த்­துப் பாட­லு­டன் தொடங்­கிய நிகழ்ச்­சி­யில் மன்றத் தலைவர் புவனேஸ்வரி மகேந்திரன் தலைமையுரை ஆற்றினார்.

சிங்­கப்­பூர் தேசி­யக் கல்­விக் கழ­கத்­தின் தமிழ்­மொழி பண்­பாட்­டுத் துறைத் தலை­வர் முனை­வர் சீதா­லட்­சுமி சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்துகொண்டு மக்­கள் கவி­ஞ­ரைப் பற்­றி­யும் அவ­ரது பாடல் வரி­களில் உள்ள சமூக விழிப்­பு­ணர்வுக் கருத்­து­க­ளை­யும் சுட்­டிக் காட்­டி­னார்.

தமிழ்­நாடு முற்­போக்கு எழுத்­தா­ளர் கலை­ஞர்­கள் சங்­கத்­தின் மாநி­லச் செயற்­குழு உறுப்­பி­ன­ரும் செம்­ம­லர் மாத இத­ழின் துணை­யா­சி­ரி­ய­ரு­மான, வழக்­க­றி­ஞர் த. ஜீவ­லட்­சுமி 'பாட்­டாளி வர்க்­கப் பார்­வை­யில் பெண்­ணி­யம்' என்ற தலைப்­பில் சிறப்­புரை ஆற்­றி­னார்.

மே தின வர­லாற்றை நினைவு கூர்ந்த அவர் இன்­றைய சமூ­கத்­தில் பெண்­க­ளின் நிலை­யைப் பற்றி விளக்­கிப் பேசி­னார்.

சிறப்பு அங்­க­மாக முனை­வர் மன்னை க. இரா­ஜ­கோ­பா­லன் தலை­மை­யில் ' கால­மி­ருக்­குது பின்னே' என்ற தலைப்­பில் இசை­ய­ரங்­கம் நடை­பெற்­றது.

மாண­வர்­கள் சமிக்‌ஷா கிரிஷ், சஹானா கிரிஷ், அதிதி சுரேஷ், அக்­‌ஷைனி தன­பா­லன், ரோஷன் பரத்­வாஜ்ம, இரகு ஸ்ரீராம் ஆகி­யோர் மக்­கள் கவி­ஞ­ரின் புகழ்­பெற்ற சில பாடல்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­துப் பாடி­னர்.

நிகழ்ச்­சி­யை "இனிக்­கும் இலக்­கி­யம்" எனும் தலைப்­பில் 'யூடி­யூப்' வழி­யா­க­வும் 'மக்­கள் கவி­ஞர் மன்­றம்' என்­கிற ஃபேஸ்புக் பக்­கத்­தி­லும் காணலாம்.

செய்தி, படம்: ஏற்பாட்டுக் குழு