அன்னையர் தினத்தைப் போற்றும் மகளிர்

3 mins read
27be12b6-24b0-4449-85ec-a4acda7c9739
அன்னையர் தினத்தை முன்னிட்டு குடும்பத்தில் உள்ள அன்னையர் களுக்குப் பரிசு தந்து மகிழ்விக்க நினைக்கும் மகள்கள் லேக்‌ஷ்த்ரா குமரேசன் (இடக்கோடி), விக்‌ஷேத்ரா குமரேசன் (சிறுமி), அவர்களது தாய் கங்காதேவி முத்துசாமி (வலக்கோடி). அருகில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள். படம்: லேக்‌ஷ்த்ரா குமரேசன் -

மோன­லிசா

நாளை அன்­னை­யர் தினத்தை முன்­னிட்டு பாசிர் ரிஸ் கிரஸ்ட் உயர்­நி­லைப் பள்­ளி­யில் உயர்­நிலை ஒன்­றில் பயி­லும் லேக்‌ஷ்த்ரா கும­ரே­சன், 13, தன் அம்­மா­வுக்கு மலர்க்­கொத்­து­டன் வாழ்த்து அட்­டை­யும் கொடுக்­க­வி­ருக்­கி­றார். அன்று அம்­மா­வுக்குப் பிடித்­த­மான சிற்­றுண்­டி­யை­யும் சமைத்து தர திட்­ட­மிட்­டி­ருக்­கி­றார்.

தமது அன்­னைக்கே ஆச்­ச­ரி­யம் ஊட்­டும் வகை­யில் இதற்கு முன்­னர் அவர் செய்­தி­ராத சமை­யல் வேலை­யில் தன் கைவண்­ணத்­தைக் காட்ட முடி­வெ­டுத்­துள்­ளார் லேக்‌ஷ்த்ரா.

பரி­சுப் பொருள் வாங்கி தன் அம்­மாவை மகிழ்­விப்­ப­தை­வி­ட­வும் சுய­மா­கப் புதி­ய­தொரு முயற்­சி­யில் ஈடு­பட்டு அதில் அன்­பை­யும் மகிழ்ச்­சி­யை­யும் பகிர்­வ­தில் அவர் பெரு­மி­தம் கொள்­கி­றார்.

வழக்­கம்­போல் இந்த ஆண்­டும் அன்னையருக்­கா­கப் பரிசு வாங்க மறந்­த­வர்­க­ளுக்கு லேக்­‌ஷ்த்­ரா­வைப் போல வீட்­டி­லி­ருந்­த­ப­டியே கடைசி நேரத்­தில் சில ஏற்­பா­டு­க­ளைச் செய்­ய­மு­டி­யும்.

"ஆண்டு முழு­வ­தும் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்­கா­மல் நமக்­காக உழைக்­கும் அம்­மா­விற்கு ஒரு நாள் முழு­வ­து­மாக விடுப்பு வழங்­க­லாம்.

"அம்­மா­விற்கு ஓய்வு வழங்­கி­விட்டு வீட்டு வேலை­கள் அனைத்­தை­யும் குடும்­பத்­தில் உள்ள அனை­வ­ரும் பகிர்ந்து செய்­ய­லாம்.

"அவ­ருக்­குப் பிடித்­த­மான உணவை சமைத்­துப் பரி­மா­ற­லாம். சமைக்க முடி­யா­த­வர்­கள் அவ­ரின் விருப்ப உணவை வீட்­டிற்கே வர­வ­ழைத்து மகிழ்­விக்­க­லாம்," என்­றார் லேக்‌‌‌ஷ்த்ரா.

"இன்று ஒரு நாள் மட்­டும் வேலை செய்­வீர்கள். அதன்­பி­றகு எல்­லா­வற்­றை­யும் மறந்­துவிடு ­வீர்­கள்," என்று சொல்­லும் அம்­மாக்­களுக்கு இன்று முதல் ஏதே­னும் ஒரு சிறிய உத­வியைச் செய்ய முன்­வ­ர­லாம்.

உதா­ர­ண­மாக காலை­யில் காபி போடு­வது, செடி­க­ளுக்கு நீர் ஊற்று­வது, துணி­களை மடித்து வைப்­பது, இஸ்­திரி போடுவது உள்ளிட்ட வேலை­களில் ஏதே­னும் ஒரு சிறு பங்கை தின­மும் செய்ய ஆரம்­பிக்­க­லாம் என்­றும் அவ­ரது நண்­பர்­கள் தங்­களது கருத்துகளைப் பகிர்ந்­துகொண்டுள்ளனர்.

அம்­மா­வுக்கு கைப்­பட எழு­திய ஒரு கடி­தம் அல்­லது வாழ்த்து அட்டை வழங்­க­லாம். அம்­மா­வைப் பற்றி சில நிமிட காணொளி ஒன்­றைத் தயா­ரித்து அனுப்­ப­லாம். அவ­ரு­டன் எடுத்த மன­திற்கு நெருக்­க­மான புகைப்படங்­களை வைத்து ஒரு புகைப்­ப­டத்­தொ­குப்பு (Photo Collage) செய்து அனுப்­ப­லாம்.

தாயைப் பிரிந்து வெளி­யூர் அல்­லது வெளி­நாட்­டில் வசிப்­ப­வர்­கள் எளி­தாக இவற்­றைச் செய்ய இய­லும்.

ஒவ்­வோர் ஆண்­டும் அன்­னை­யர் தினம் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் வரு­வ­தால் அன்­றைய முழு பொழு­தை­யும் அம்­மா­வு­டன் மகிழ்ச்­சி­யாக கழிக்­க­லாம்.

தற்­போது கொவிட்-19 விதி­முறை­கள் தளர்த்­தப்­பட்ட நிலை­யில் அவ­ரு­டன் கோவில், உண­வ­கம், கடைத்­தெரு, திரைப்­ப­டம் போன்ற இடங்­கள் அல்­லது பிற சுற்­று­லாத் தலங்­க­ளுக்குச் செல்­ல­லாம்.

இவற்­று­டன் மட்­டு­மல்­லா­மல், அவ­ருக்­குப் பிடித்த விஷ­யத்­தில், ஒரு நாள் வகுப்புக்கு அல்­லது பயி­ல­ரங்­குக்கு ஏற்­பாடு செய்து அனுப்­ப­லாம்.

அவ­ரு­டைய நெருங்­கிய நண்­பர்­க­ளு­டன் வெளி­யில் சென்று இளைப்­பாற ஏற்­பாடு செய்­ய­லாம்.

இது­கு­றித்து இந்­தி­யர்­க­ளுக்­கான தொண்டு நிறு­வ­னத்­தில் துணை மேலா­ள­ராகப் பணி­பு­ரி­யும் திரு­வாட்டி கங்­கா­தேவி முத்­து­சாமி, 42, கூறி­ய­போது, "நான் என் அம்­மா­வுக்­கும் மாமி­யா­ருக்­கும் அன்­னை­யர் தினத்­தன்று வழக்­க­மாக அவர்­களுக்குப் பிடித்­த­மான புடவை, கைப்பை, கால­ணி­கள் போன்ற உப­யோ­க­மான பொருள்­களை வாங்­கித் தரு­வேன். அவர்­களை இரவு உண­விற்கு நல்ல உண­வ­கத்­திற்கு அழைத்­துச் செல்­வேன்.

"இந்த வரு­டம் நான் அவர்­களை முகம், கை, கால் ஒப்­ப­னை­களுக்காக அழகு நிலை­யத்­துக்கும் உடற்­பி­டிப்பு சிகிச்­சைக்கும் அழைத்துச் செல்வதற்கும் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றேன்.

"வேலைக்குச் செல்­லும் எனக்­கும் என் பிள்­ளை­க­ளுக்­கும் பெரிய அரவணைப்பாக இருக்­கும் இவர்­கள் நிச்­ச­யம் இதனை விரும்­பு­வார்­கள் என்று நினைக்கிறேன்," என்று உற்­சா­க­மா­கக் கூறி­னார்.

அம்மாக்கள் அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.