ஹனோய்: ஓட்டப்பந்தய நட்சத்
திரங்களான சாந்தி பெரேராவும் மார்க் பிரையன் லூயிசும் புயல் வேகத்தில் ஓடி, பதக்கம் வென்று சிங்கப்பூருக்குப் பெருமை
சேர்த்துள்ளனர்.
வியட்னாமில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில், மகளிருக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஏற்கெனவே தங்கம் வென்ற சாந்தி, நேற்று 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளி வென்றார்.
25 வயது சாந்தி மின்னல் வேகத்தில் ஓடி 11.62 வினாடிகளில்
போட்டியை முடித்து நூலிழையில் தங்கத்தைத் தவறவிட்டார்.
பிலிப்பீன்சின் கேலா ரிச்சர்ட்சன் 11.60 வினாடிகளில் பந்தயத்தை முடித்து முதலிடம் பிடித்தார்.
தாய்லாந்து வீராங்கனை வெண்கலம் வென்றார்.
தென்கிழக்காசிய விளையாட்டு கள் 100 மீட்டர் பந்தயத்தில் சாந்தி வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு அவர் தொடர்ந்து மூன்று முறை வெண்கலம் வென்றார்.
ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிங்கப்பூரின் மார்க் பிரையன் லூயிஸ் வெண்கலம் வென்றார்.
அவர் 10.56 வினாடிகளில் பந்தயத்தை முடித்தார். தகுதிச் சுற்றில் இதைவிட வேகமாக ஓடி 10.48 வினாடிகளில் முடித்திருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 100 மீட்டர் அஞ்சல் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்ற சிங்கப்பூர் குழுவில் பிரையன் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.