லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி வெற்றியாளர் பட்டத்தை எந்தக் குழு தட்டிச்செல்லும் என்பதைப் பற்றி அறிந்துகொள்ள போட்டியின் இறுதி நாள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூலும் சவுத்ஹேம்டனும் மோதின. இதில் லிவர்பூல் 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதனால் லீக் பட்டியலில் 90 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கும் மான்செஸ்டர் சிட்டியைவிட ஒரு புள்ளி குறைவாகப் பெற்று லிவர்பூல் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே இறுதி ஆட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லாவை சிட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று சந்திக்கிறது. அதே நாளன்று உல்வ்ஸ் குழுவும் லிவர்பூலும் மோது
கின்றன.
வில்லாவை சிட்டி தோற்கடித்தால் வெற்றியாளர் பட்டத்தை அது கைப்பற்றுவது உறுதி.
ஆனால் சிட்டி சமநிலை கண்டாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ, லிவர்பூல் அதன் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறும்
பட்சத்தில் லீக் பட்டம் லிவர்பூலுக்குச் சொந்தமாகிவிடும்.
லீக் பட்டத்துக்குக் குறிவைத்து இறுதி வரை போராட இருப்பதாக லிவர்பூலின் ஜேம்ஸ் மில்னர் தெரிவித்தார்.
இதற்கிடையே, இரண்டாம் நிலை லீக் போட்டியிலிருந்து பிரிமியர் லீக்கிற்கு முன்னேறும் குழுவை நிர்ணயிக்கும் 'பிளே ஆஃப்' சுற்றுக்கு நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் குழுவும் ஹட்டர்ஸ்ஃபீல்டு டவுனும் தகுதி பெற்றுள்ளன.
நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஷெஃபீல்டு யுனைடெட் குழுவை பெனால்டி 'ஷுட்அவுட்'டில் ஃபாரஸ்ட் தோற்கடித்தது.
1999ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கிற்குத் திரும்பும் வாய்ப்பை அது நெருங்கியுள்ளது.