நமது அன்றாட வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் மனமும் உடலும் பாதுகாப்பாக அமையும்.
தண்ணீர் நிறைய குடியுங்கள்.
காலை உணவை ஓர் அரசர் போலவும் மதிய உணவை ஓர் இளவரசர் போலவும் இரவு உணவை யாசகம் கேட்பவரைப் போலவும் உண்ணவேண்டும்.
இயற்கை உணவு, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவைத் தவிர்த்து விடுங்கள்.
உடற்பயிற்சி, பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
நிறைய புத்தகங்கள் படியுங்கள்.
குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
குறைந்தது 10 முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடா தீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.