நிரந்தர உரிமைப் பத்திரம் குறித்த விழிப்புணர்வு

நிரந்தர உரிமைப் பத்திரம் குறித்த விழிப்புணர்வு

4 mins read
13479c3e-b8c7-4fc5-b225-58f3097c419f
நிரந்தர உரிமைப் பத்திரம் குறித்து அறிந்துகொண்டு பதிவு செய்ய நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் தொண்டூழியர்களாகச் செயல்படும் வழக்கறிஞர்கள் ஆலோசனை வழங்கினர். படம்: இந்து அறக்கட்டளை வாரியம் -

யுகேஷ் கண்ணன்

நிரந்தர உரிமைப் பத்திரம் என்பது சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றலை ஒருவர் இழக்கும் பட்சத்தில் அவர் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும் உரிமையை இன்னொரு வருக்கும் கொடுக்கும் ஆவண மாகும். நிரந்தர உரிமைப் பத்திரத்தை ஒருவர் சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றல் இருக்கும்போதே செய்துவிட வேண்டும்.

இதற்கான பதிவு நிகழ்ச்சி இம்மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை நடைபெற்றது.

சிராங்கூன் சாலையில் உள்ள 'பிஜிபி' மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு, பிப்ரவரி 18ஆம் தேதியன்று சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திலும் ஏப்ரல் 15ஆம் தேதியன்று சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலும் நிரந்தர உரிமை பத்திரத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆலயத் தொண்டூழியர் களுக்காக உரைகள் நடத்தப் பட்டன. அவற்றுக்கும் இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெற்ற உரை­களில் கலந்­து­கொண்­ட­வர்­கள் மட்­டு­மின்றி அதில் கலந்­து­கொள்­ளா­த­வர்­களும் இம்­மா­தம் 21ஆம் தேதி­யன்று நடை­பெற்ற நிகழ்ச்­சிக்கு வந்­த­னர்.

சிங்கப்பூரில் நிரந்தர உரிமைப் பத்திரத்தைப் பதிவு செய்பவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக பொதுக் காப்பாளர் அலுவலகம் கவலை தெரிவித்து, இந்து அறக்கட்டளை வாரியத்தின் உதவியை நாடியதாக வாரியத்தின் சேவா செயற்குழுவின் தலைவரும் வழக்கறிஞருமான திருமதி சுசீலா கணேசன், 51, தெரிவித்தார்.

கொவிட்-19 கிருமித்தொற்றின் நெருக்கடிநிலை காரணமாக இந்த முயற்சியை முன்பே தொடங்க முடியாமல் போனதாக அவர் கூறினார்.

"சுய­மாக முடிவு எடுக்­கும் ஆற்­றலை இழக்­கும் அபா­யம் அனைத்து வய­தி­ன­ருக்­கும் ஏற்­ப­ட­லாம். அத்­தைய சூழல் ஒரு­வ­ருக்கு ஏற்­பட்­டால் அவர் சார்­பாக யார் முக்­கிய முடி­வு­களை எடுப்­பது என்­பது குறித்து குடும்ப உறுப்­பி­னர்­க­ளி­டையே இணக்­கம் காண முடி­யாத நிலை ஏற்­ப­டு­வ­தோடு மன உளைச்­ச­லும் ஏற்­படும்.

"மேலும், இப்­பத்­தி­ரம் இல்­லா­விட்­டால், பாதிப்படைந்தோர் குடும்­பத்­தார் நீதி­மன்­றத்­தில் மன­நல ஆற்­றல் சட்­டத்­தின்­கீழ் முடி­வு­கள் எடுக்­கும் உரி­மை­யைப் பெற வேண்­டும். அதற்கு சுமார் $6,000லிருந்து $12,000 வரை செல­வா­க­லாம். அத­னு­டன் ஒப்­பி­டு­கை­யில், நிரந்­தர உரி­மைப் பத்­தி­ரத்­தின் பதிவு தற்­போது சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் நிரந்­தரவாசி­க­ளுக்­கும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இல­வ­ச­மாக செய்து தரப்­

ப­டு­கிறது," என அவர் கூறி­னார்.

நிகழ்ச்சிக்கு வந்து நிரந்தர உரிமைப் பத்திரத்தைப் பதிவு செய்துகொள்ள விரும்பியோருக்கு ஒன்பது வழக்கறிஞர்கள் அதற்கான அலுவல்களை இலவசமாகச் செய்து கொடுத்தனர். இந்த வழக்கறிஞர்கள் அனைவரும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தொண்டூழியர்கள் என்று திருமதி சுசீலா கூறினார்.

இப்பதிவு நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த. ராஜசேகர், 60, தெரிவித்தார். தொண்டூழியம் புரிந்த வழக்கறிஞர்களுக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்­நி­கழ்ச்­சி­யில் பங்­கெ­டுத்த வழக்­க­றி­ஞர்­களில் ஒரு­வ­ரான திரு கந்­தன் ராக­வேந்­திரா, 37, தனது நிபு­ணத்­து­வத்தை மக்­க­ளுக்கு உத­வும் வகை­யில் பயன்­ப­டுத்த வேண்டு­ மென எண்­ணி­ய­தால் இந்­நி­கழ்ச்சி ­யில் பங்­கேற்­ற­தாக கூறி­னார். இப்­

ப­திவு நிகழ்ச்­சி­யில் பல குடும்­பங்­கள் கலந்துகொண்­ட­தா­க­வும் நிரந்­தர உரிமைப் பத்­தி­ரத்­தின் முக்­கி­யத்­து­வத்தை அறிந்­து­கொண்டு மேலும் பல இந்­தி­யர்­கள் இது­போன்ற பதிவு நிகழ்ச்­சி­களில் பங்­கேற்­றால் சிறப்­பாக இருக்­கு­மெனத் தெரிவித்தார்.

தமது சகோ­தரி நிரந்­தர உரி­மைப் பத்­தி­ரத்­தைப் பதிவு செய்­ய­வில்லை என்­றும் எதிர்­பா­ராத வகை­யில் அவ­ருக்கு மன­ந­லப் பாதிப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் அதன் கார­ண­மாக அவ­ரது குடும்­பத்­தில் பல பிரச்­

சி­னை­கள் ஏற்­பட்­டுள்­ள­தாகவும் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற திரு­மதி சுப்­பி­ர­மணி செல்­லம், 70, தெரி­வித்­தார். அத்தகைய நிலை தமது குடும்பத்துக்கு ஏற்படக்கூடாது எனக் கருதி நிரந்தர உரிமைப் பத்திரத்தைப் பதிவு செய்துகொள்ள முடிவு எடுத்து நிகழ்ச்சிக்கு வந்ததாக அவர் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

சுயமாக முடிவு எடுக்கும் திறனை தாம் ஒருவேளை இழந்தால் தமது சார்பாக முடிவுகளை எடுக்கும் உரிமையை தமது இரு மகள்களுக்கும் அவர் வழங்கி உள்ளார்.

தற்­போது கொவிட்-19 சார்ந்த பாது­காப்பு நடை­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ள­தால், பொது மக்­க­ளுக்கு இப்­பத்­தி­ரத்­தைப்­ பற்­றிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த ஜூன் 12ஆம் தேதி மாரி­யம்­மன் ஆல­யத்­தில் 250 பேர் வரை பங்­கெ­டுக்­கும் நிகழ்ச்சிக்கு ஏற்­பாடு செய்­யப்­

பட்­டுள்­ளது.

அதைத் தொடர்ந்து, ஜூன் 26ஆம் தேதி அதே ஆல­யத்­தில் பத்­தி­ரத்­தின் பதிவு நிகழ்ச்சி நடை­பெ­றும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பொது மக்­கள் இவ்­வு­ரை­யில் கலந்துகொண்டு நிரந்­தர உரிமைப் பாத்­தி­ரத்­தின் முக்­கி­யத்­து­வத்தை அறிந்து அதற்­காக பதிவு செய்து கொள்ள வேண்­டு­மென இந்து அறக்­கட்­டளை வாரி­யம்

வலி­யு­றுத்­துகிறது.