சிங்கப்பூரின் முன்னாள் காற்பந்து நட்சத்திரம் ஃபாண்டி அகமது தமது 60வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அதனையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நூல் வெளியிடப்பட்டது. நூலை துர்கா பொன்னம்
பலம் புனைந்துள்ளார்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு தமது மனைவி, ஐந்து பிள்ளை
களுடன் ஃபாண்டி பெருமிதத்துடன் கலந்துகொண்டார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கலந்துகொண்டார்.
1994ஆம் ஆண்டில் ஃபாண்டியின் தலைமையின்கீழ் மலேசியக் கிண்ண காற்பந்துப் போட்டியில் களமிறங்கிய சிங்கப்பூர் குழு கிண்ணம் ஏந்தியது. முன்னணி தாக்குதல் ஆட்டக்காரராக மின்னிய ஃபாண்டி சிங்கப்பூருக்காக பல கோல்களைப் போட்டு பெருமை தேடித் தந்தார். ஆட்டக்காரர் என்கிற முறையில் ஓய்வுபெற்றதை அடுத்து, பயிற்றுவிப்பாளராகவும் அவர் ஜொலித்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகப் பயிற்றுவிப்பாளராக முத்திரை பதித்தார்.