ஜகார்த்தா: 11வது ஆசியக் கிண்ண ஹாக்கி போட்டி
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.
எட்டு அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் முதல் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு வெற்றியாளர் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின.
இந்த சுற்றில் ஒவ்வோர் அணியும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும்.
இதன் முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை நேற்று முன்தினம் எதிர்கொண்டது.
இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் மஞ்சித் சிங், பவன் ராஜ்பர் ஆகியோர் தலா ஒரு கோல் போட்டனர்.

