கோடைக்காலத்திற்கு உகந்த மிக அருமையான பானம்

கோடைக்காலத்திற்கு உகந்த மிக அருமையான பானம்

1 mins read
640ccf31-8f8c-407b-a4b0-e3e682f70966
-

கடந்த சில வாரங்­க­ளாக சிங்­கப்­பூ­ரில் வெயில் கொளுத்­தி­வ­ரும் நிலை­யில், தாகம் தீர்த்து, புத்­து­ணர்ச்சி அளிக்­கும் பானங்­க­ளைப் பல­ரும் விரும்­பு­வர். அத்­த­கை­ய­தோர் அரு­மை­யான பானம்­தான், பெரும்­பான்மை இந்­தி­யக் குடும்­பங்­களில் தவ­றாது இடம்­பி­டித்­தி­ருக்­கக்­கூ­டிய மோர்.

தயி­ரைக் கடைந்து, வெண்­ணெய்யை எடுத்­த­பின் மீந்­துள்­ள­தில் நீரும் சீர­கம், புதினா, மிள­காய், இஞ்சி போன்ற மண­மூட்­டி­க­ளை­யும் கலந்­தால் சுவை­யான மோர் தயா­ரா­கி­வி­டும்.

தாகம் தணித்து, மனத்­திற்கு இதம் அ­ளிக்­க­வல்ல பான­மாக மட்­டு­மின்றி, தோல், முடி, உடல் எடை சார்ந்த பல நன்­மை­க­ளை­யும் மோர் அருந்­து­வ­தன் மூலம் பெற­லாம்.

உட­லில் அமி­லத்­தன்­மை­யைக் குறைக்க மோர் பெரி­தும் உத­வு­கிறது. உண­வுண்­ட­பின் அடிக்­கடி புளிப்பு ஏப்­பம் ஏற்­பட்­டால், மோர் குடிக்­கத் தொடங்­குங்­கள். உண­விற்குப்­பின் ஒரு குவளை மோர் அருந்­து­வது செரி­மா­னத்­திற்கு உதவி, அமி­லத்­தன்­மை­யைத் தடுக்­கும்.

மோர் அருந்­தும் பழக்­கம், இரத்த அழுத்­தத்­தைக் குறிப்­பி­டத்­தக்க அளவு குறைப்­ப­தாக அமெ­ரிக்க தேசிய மருத்­துவ நூல­கத்­தின் அறிக்கை கூறு­கிறது.

கால்சியம், பொட்­டா­சி­யம், வைட்­ட­மின் 'பி', புர­தச்­சத்து உள்­ளிட்ட சத்­து­கள் மோரில் நிரம்­பி­யுள்­ளன.

உடலை, குறிப்­பாக செரி­மான மண்­ட­லத்­தைக் குளிர்­விக்­கும் தன்மை கொண்­டது மோர். வயிற்­றெ­ரிச்­ச­லுக்கு மோர் அருந்­து­வது உட­னடி பலன் தரும்.

கொழுப்பு தவிர்த்து பாலில் உள்ள எல்­லாச் சத்­து­களும் மோரி­லும் இருப்­ப­தால் உடல் எடை­யைக் குறைக்­க­வும் இது உத­வு­கிறது.